Showing posts with label சரணாகதி. Show all posts
Showing posts with label சரணாகதி. Show all posts

Monday, 23 February 2015

ரமணஜோதி 76

ரமணஜோதி  76

சரணாகதி  2
நேசமி லெனக்குன் னாசையைக் காட்டிநீ
மோசஞ் செயாதரு ளருணாசலா
“அருணாசலா, நான் மிகுந்த பிராயாசைக்குப் பின் இகலோக விஷய வாசனைகளிலிருந்து விடுபட்டு உன்னிடம் அடைக்கலம் ஆக வந்திருக்கிறேன்; உன்னுடைய அரூளால், எனக்கு உன் மீது ஈடுபாடு உண்டாய் அது பக்தியாய் மாறி, நான் வந்துள்ளேன். இப்பொழுது நீ என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என் கதி என்னவாவது?”
இந்த சுலோகம் மூலம் பகவான் இரண்டு உண்மைகளை தெள்ளத் தெளிவாக கூறுகிறார்:
1.       பரமன் அருளில்லாமல் யாரும் பக்தனாகி விட முடியாது.
2.       பகதனானாலும் பரமன் அருள் இல்லாமல் ஆத்ம சாக்ஷாத்காரம் நேட முடியாது. 
  ஒருவன் பரமன் அருளால் பக்திக்கு ஆட்படும் பொழுது,தானாகவே விஷய வாசனைகள் பலமிழந்து வைராக்யம் திடப்படுகிறது. வைராக்யம் திடப்பட, பரமனிடமுள்ள பக்தி வலுப்பெறுகிறது.வாசனைகளை விடவேண்டும் என்றும் சொல்லும்பொழுது பகவான் ரமணர் கூறுவார்:‘வாசனைகள் இரண்டுவிதம்; சுவாசiனை மற்றும் குவாசனை.இவைகளில் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை .சிலரில் சில நேரங்களில் இதில் ஒன்று மேலோங்கி நிற்கும்.முதலில் சுவாசனைகளை போற்றி வளர்க்க வேண்டும்; ஆனால் அவைகளையும் ஞானம் மூலம் இல்லாமலாக்கி விடவேண்டும்’
பகவான் மேலும் கூறுவார்:
வாசனைகள் இதயத்தில் அடக்கி வைக்கப் பட்டுள்ளது. அங்கிருந்து அவை கிளம்பி புத்தியில் ஆத்ம சக்தி மூலம் பிரகாசிக்கின்றது. இதயத்தில் அவை அணு உருவத்தில் மிகவும் சூக்ஷ்மமாக இருக்கிறது. புத்தி எனூம் சினிமாத்திரையை அடையும் பொழுது அவை வளர்ந்து தானாகவே இயங்கக்கூடிய சக்தியைப் பெறுகிறது. மனோசக்தி அதன் மீது ஆதிக்கம் செலுத்தும்பொழுது வாசனைகள் அதன் விளையாட்டை ஆரம்பிக்கிறது. ஆத்மாவின் கட்டுப்பாட்டிலிருந்து அவை சுதந்திரம் அடைந்து  தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கிறது.அது தான் சம்சார இன்ப துன்பங்களின் ஆரம்பம்.
பகவான் மேலும் சொல்வார்:
அமைதியாக இருந்தால் அருணாசலனின் அருள் கிடைக்கும். நம் மனமும் அமைதியாக இருக்கும்படி தூண்டும். ஆனால் அதே மனம் அங்கும் இங்கும் அலை பாயும். ஒரு இடத்தில் நிற்காது..எல்லா வேதங்களும் ஸ்ருதிகளும் ,ஸ்ம்ரிதிகளும் புராணங்களும் மன அமைதியின்             அவசியத்தை எடுத்து உரைக் கின்றன; குருமார்கள் மாற்றி  மாற்றி வலியுறுத்துகிறார்கள். நமக்கும் புரிகிறது மனம் அமைதியடைந்து விட்டால் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்து விடலாம் என்று. ஆனால் முடிவதில்லை.  நாம் மீண்டும் மீண்டும் மாய வலையில் சிக்கிகொள்கிறோம். ஆகவே தான் பகவான் சொல்கிறார், அருணாசலனின் அருள் இல்லாமல் எதுவும்  நடவாது என்று.
இந்தக் கருத்தை கூறி விட்டு தாயுமானவரின் உடல் பொய்யுறவுஎன்ற பாடல் தொகுப்பிலிருந்து ஐந்தாம் பாடலையும் 52 ஆவ்து பாடலையும் மேற்கோள் காட்டுவார்:
          ஏதுக்குச் சும்மா இருமனமே என்றுனக்குப்
          போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய்-வாதுக்கு
          வந்தெதிர்த்த மல்லரைப் போல் வாதாடினாயேயுன்
          புத்தியென்ன போதமென்ன போ ! உடல் பொய்யுறவு பாடல் 5
          சும்மா இருக்க சுகமுதய மாகுமே
          இம்மாயா யோகமினி ஏனடா – தம்மறிவின்
          சுட்டாலே யாகுமோ சொல்லவேண்டாங்கன்ம
                          சிறுபிள்ளாய் நீ !
                           பாடல் 52
அதே போல் பாயபுலி என்ற பாடல் தொகுப்பிலிருந்து 36 ஆவது பாடலும் நினைவில் கொள்ளத் தக்கது என்பார் பகவான்.
          சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
          அம்மா நிரந்தரஞ்ச் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
          பெம்மான் மவுனி மொழியையுன் தப்பிஎன் பேதமையால்
          வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அன் தோஎன் விதிவசமே
    
உரிமை எடுத்துக் கொண்டு பகவான் பரமனிடம் பிரார்த்திக்கிறார்.’நீ என்னை கைவிடலாகாது என்று.
தாயுமானவரும்  இதே கருத்தை தனது எங்கு நிறைகின்ற  பொருள்’  என்ற பத்தாவது பாடலில் கூறுவார்:.
 
அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
      ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
   அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
      அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
      வாயாய்ப் பிதற்றுமவரார்
   மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
      வன்மையொ டிரக்கமெங்கே
அவனுடைய அருள் இன்றி அணுவும் அசையாது. அப்படியிருக்க அவன் அருள் இன்றி எப்படி  நான் உன்னில் லயிக்க முடியும் இந்த மனம் ஏன் மாய வலையில் சிக்கி தவிக்கிறது? ஞானிகள்  எல்லாம் அறிந்திருந்தும் மௌனிகளாக இருக்கின்றனர்.  நான் மட்டும் ஏன் இப்படி உடம்பெலாம் வாயாய் பிதற்றுகின்றேண்? என்று அங்கலாய்க்கிறார் தாயுமானவர்.
பகவான் ரமணர் இப்படி உரிமையுடன் கேட்பது போல் ‘நடராஜ பத்து ‘ என்ற நூலில் முனிசாமி முதலியார் என்ற புலவர்  முதலில் பரமனை புகழ்ந்து பாடுகிறார்:பிற்கு நிந்திப்பது போல் வேண்டுகிறார்:
“        மன்னாதி பூதமொடு விண்ணாத் அண்டம் நீ
               மறை நான்கின் அடிமுடியும் நீ
   மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
                     மண்டலமிரண்டேழும் நீ
மானாடமழுவாட மதியாட புனலாட மங்கை
                                  சிவகாமியாட,
         கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
                             குஞ்சரமுகத்தானாட
       நீ இப்படி சுகமாக விண்ணுலகிலிர்க்கிறாய்.
      உண்டுண் டுறங்குவதைக் கண்ட தேயல்லாது
                                 ஒரு பயனடைந்திலேனைத்
    தட மென்ற மிடிகரையில் பந்த பாசங்களெனும்
          தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
          தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைனின்று ஏனென்று கேளா
          திருப்பதுன்னழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
          தில்லை வாழ் நடராசனே
எவ்வளவு அழகாக அத்வைத சித்தாந்தை வெளிக்கொண்ருகிறார் கவிஞர் முனிசாமி முதலியார். அதே நேரத்தில் சிவகாமி நேசனை கடிந்தும் கொள்கிறார்.’ நீ மட்டும் பூத கணங்கள் சூழ, மானாட மயிலாட என்று ஆனந்தமாயிருக்கிறாய்
,நானோ,இந்த உலகில் ,தாயென்றும் சேயென்றும், நானென்றும்,நீயென்றும் பாசக்கயிற்றால் கட்டப் பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறேன்,
இது உனக்கழகோ ?’ என்று ஈசனிடம் முறையிடுகிறார்.
பக்தியின் மகோன்னத நிலையை அடந்தவர்களெல்லாம் ஞானம் பெற்றிருந்தாலும் கூட நமக்காக அந்த பரமனிடம் வாதாடுகிறார்கள். நமக்கருளி நம்மை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார்கள்.

பகவான் ரமணர் இவர்களுக்கெல்லாம் மேலே பரமனின் அருள் பெற்று சிறுவயதிலேயே ஞானியாகியிருந்தாலும் கூட மணமாலையின் இந்தக் கண்ணி மூலம் நமக்காக அருள் வேண்டி வாதாடுகிறார்.

Wednesday, 11 February 2015

ரமணஜோதி 68

ரமணஜோதி 68

சரணாகதி

நகைக்கிட மிலைநின் னாடிய வெனையரு
கையிட்டுப் பார்நீ யருணாசலா
“ அருணாசலா,நான் உன்னை நம்பி வந்துள்ளேன்.என்னைப் பார்த்து நகைக்காமல் ஏற்றுக்கொள் அருணாசலா. என்னிடம் நகை ஏதுமில்லை.உன் அருள் ஒன்று மட்டும் தான் என் ஆபரணம்.அதை எனக்கருளி என்னை அனுக்கிரகிக்க வேண்டும் அருணாசலா” என்று பகவான் நம் சார்பில் பிரார்த்திக்கிறார்.
நாயகியிடம் என்ன குறை இருந்தாலும் அருணாசலனின் அருள் கிடைத்துவிட்டால் குறைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
பக்தியில் நாம் முன் ஒரு மடலில் கூறியது போல் மாதுரிய பக்தி,வாத்சலிய பக்தி எனும் இரண்டு உண்டு. மேலே கூறியது   நாயகி-நாயக பாவத்தின் ஒரு பிரதிபலிப்பே.
நாயிகீ நாயக் உறவில் ஒருவருக்கு மற்றவர் மீது அசாதரணமான உரிமை தென்படும்.
அதே போல் வாத்சல்ய பக்தியிலும் மிகுந்த உரிமை தென்படும்.இதற்கு உதாரணமாக ஸ்ரீ நாராயண குரு தேவனின் “ஜனனீ. நவரத்னமஞ்சரி”யை எடுத்துக்கொள்ளலாம் அந்த நூல் முழுவதும் மாத்ரு வாத்சல்யம் தளும்பி நிற்கும்.
நாராயண குரு தேவன் பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.சமுதாய சீர்திருத்த வாதியாக ஆரம்பகாலங்களில் உருவானவர்,காலப்போக்கில் ஆன்மீகத்தில் மூழ்கி அத்துவதைத்தின் சிறந்த மார்க்கதரிசியாக மாறினவர்.ஏராளமான ஆன்மீக நூல்கள் நல்ல மலயாளத்தில் எழுதியவர்.
நாராயண குருதேவன் மாகவி தாகூர்,மஹாத்மா காந்தி போன்றவரால் சமூஹ சீர்திருத்தத்திற்குள் ஈர்க்கப்பட்டவர். அவர் ஆன்மீகத்திற்குள் வந்த பிறகு அவர் துவக்கிவைத்த ஜாதி சமுதாய இயக்கங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தர்ம பரிபாலனத்தில் முழு கவனம் செலுத்தலானார். ஒரு முறை ரமணாசிரமத்திற்கு பகவான் ரமணரை தரிசிக்க வந்தார்.மூன்று நாள் ஆசிரமத்தில் தங்கியிருந்து விட்டு சென்றார்.பகவானிடம் ஒரு வார்தை கூட பேசவில்லை.ஊர் திரும்பிய குருதேவன் ,” ஜீவன் முக்தி,,நிர்விருதி சமாதி என்றெல்லாம் கூறுகிறார்களே,அதற்கெல்லாம் நடமாடும் உதாரணம் பகவான் ரமணர்” என்று கூறினார்.
அவரது ஜனனீ நவரத்ன மஞ்சரியில் அவருக்கு ‘விஸ்வ ஜனனி’யில் இருந்த அபாரமான பக்தியும் அறிவும் வெளிப்படுகிறது. முதல் சுலோகமே எவ்வளவு அர்த்தவத்தாக இருக்கிறது பார்ப்போமா?
          ஒன்னாய மாமதியில் நின்னாயிரம் த்ரிபுடி
               வன்னாசு தன்மதி மற-
          ந்னன்னாதியில் ப்ரியமுயர்ன்னாடலாம் கடலி—
                   லொன்னாயி வீணுவலயும்
          என்னாசயம் கதி பெறும் நாதபூமியில----
                   மர்ன்னஆவிராப படரும்
          சின்னாபியில் த்ரிபுடியென்னாணறும்படி
                   கலர்ன்னாறிடுன்னு ஜனனீ !
ஏகமும் அத்வையமுமாயிருக்கின்ற அந்த மாமதியிலிருந்து ஆயிரமாயிரம் த்ரிபுடிக்கள் உளவாகின்றன..அவித்யையால் நமது சுத்த சைதன்யமாயிருக்கின்ற ஆன்மா மனஸாக,புத்தியாக,சிந்தையாக விரிவடைவதற்கு முன்னால் மாமதியாகிருக்கின்றது. எந்தவிதமான கள்ங்கமுமில்லாத ஆதி அந்தமிலாத மதியாயிருக்கும்.அந்த சுத சைதன்யமான ஆன்மாவில் த்ரிபுடி யாக ஆயிரம் சிந்தனைகள் உயிர்த்தெழுகின்றன.
த்ரிபுடி என்றால் என்ன? ஒன்றாயிருக்கின்ற எல்லாவற்றையும் முப்பரிமாணத்தில் காணுகின்ற ஒரு வள்ர்ச்சி- காணுபவன்,காண்கின்ற பொருள்,காணுதல், சாப்பிடும் கிரியை, சாப்பிடுகிறவன், சாப்பாடு, கேட்கின்றவன்,கேட்கப்படுகின்ற ஓசை, கேட்டல் என்ற கிரியை இப்படி எதைஎடுத்தாலும் முப்பரிமாணம் காணுகின்ற ஒரு பார்வை கோணம் உண்டான உடனையே,நம்முடை உண்மையான சொரூப அறிவு மறைந்து மறந்து   போகிறது. அந்த மறதி ஏற்பட்டவுடன் அன்னாதி விஷய வாஸனைகள் வளருகிறது. விஷய வாசனை உண்டானவுடன்,அவை நிறைவேறாத பொது கோபமும்,விரோதமும் உண்டாகி புத்தி பிரம்சம் ஏற்படுகிறது..பிரியமும் அப்பிரியமும் உண்டாகின்றது
இந்த விஷய வாசனையானது துன்பத்தில் சென்று முடிகிறது  நாம் துன்பக்கடலில் அல்லாட நேரிடுகிறது. “ஆகவே, அம்மா ஜகன்மாதா, என் ஆன்மா துயரக்கடலில் அகப்பட்டு மோசனத்திற்கு வழி தெரியாமல் தவிக்கின்றது.விசுவ மாதாவான நீ என்று இந்த முப்பரிமாண சிந்தனைகளை நாசம் செய்து, சுத்தமான நாதமண்டலத்தில் முக்திக்கு ஆதாரமாகவுள்ள ஆத்ம சைதன்யத்தில் என்னை லயிப்பித்து எனக்கு நிரந்தர சாந்தி அளிக்கப்போகிறாய்?” என்று குருதேவன் அந்த ஜகன் மாதாவிடம் பிரார்த்திப்பதாக ஆரம்பிக்கிறது நவரத்தின மாலை...
பக்தி ததும்பி நிற்கின்ற இந்த் ஸ்தோத்திரம் பக்தியுடன் தார்சனிக பாவத்தையும் ஆன்மீகத்தையும் சேர்த்து விள்ம்புகின்றது.
இந்த துதி முடியும்பொழுது கேட்கின்ற ,”ஆவிராப படரும் சின்னாபியில் த்ரிபுடி என்று முற்றிலும் அழிந்து எனக்கு முக்தி கிடைக்கும் தாயே” என்று கேட்கிறார் குரு தேவன். ‘ஆவிராப படரும்” என்ற சொற்றொடர் ஆன்மசைதன்யம் தளும்பி நிற்கின்ற பொருளை தருகிறது.’சின்னாபி’ என்றால் நம்முடைய சூக்ஷ்ம போத தலத்தில் என்று நிரந்தர சாந்தி உள்வாகும்? என்ற கேள்வியுடன் முடிகிறது இந்த முதல் சுலோகம்.
‘என்று நான் உன் ஞானஒளியில் கரைந்து  என்னுடைய சபலங்களெல்லாம் உன்னுடைய சக்தியில் லயித்து இல்லாதாகி,என்னுடைய துன்பங்களெல்லாம் உன்னுடைய ஆனந்த சாகரத்தில் லயித்து இருக்கும் இடம் தெரியாமல் போக,என்னுடை பேத சிந்தனைகளெல்லாம் அஸ்தமித்து உன்னுடைய ஆசிகளாகி மாறி என்னுடைய வாழ்வை-நான் பிறந்ததின் அர்த்தத்தை தன்யமாக்குகின்ற அந்த புனித நன்னாள் என்று வருமம்மா?” என்று கேட்கிறார் ஸ்ரீ நாராயண குரு தேவன்.
இதே பாவம் தான் காளிந்தீ நதிக்கரையில் ப்ரேமையில் கரைந்து காதல் கீதங்கள் பாடின கோபஸ்த்ரீகளிலும் காண்கிறோம். ஒரு வித்தியாசம்- இங்கு மாத்ரு வாத்சல்யம் முனைந்து நிற்கிர்கிறது ,கோபிகைகளின் ப்ரணய கீதையில் காதல் ரசம் ததும்பி நிற்கிறது.
மதுரை கலம்பகம்’  எனும் பழம் பெரும் காப்பியமும் ஜகன்மாதாவை போற்றி பாடல்கள் கொன்டுள்ளது. இந்த காப்பியம் குமர குருபரனார் எனும் மகான் இயற்றியது.
அந்த காவியத்தில் வரும் கீழ்க்காணும் வரிகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை:
          போகமோய் விளைந்தோய் நீ
          புவனமாய்ப் பொலிந்தொஈ நீ
          ஏகமா யிருந்தோய் நீ
          யெண்ணிறந்து நின்றோய் நீ
வானு நீ
னிலனு நீ
மதியு நீ
கதிரு நீ
ஊனு நீ
யுயிரு நீ
யுளது நீ
யிலது நீ
இப்படியெல்லாமே அந்த ஜகன்மாதா தான் எங்கிறார் குமர குருபரனார்.
அபிராமிபட்டர் தனது அபிராமி அந்தாதியில் கீழ்க்கண்டவாறு இறைஞ்சி அம்மையை வேண்டுவதும் நாம் நினைவு கூரலாம்:
          சிறக்கும் கமலத் திருவே,நின் சேவடி சென்னிவைக்க
          துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும்,துரியம் அற்ற
          உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
          மறக்கும்பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே
“ அம்மா தாயே,உலக மாதா,அழகான தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவே, எப்பொழுது இந்த உடல் என்னுடையது அல்ல, உயிரும் எனது அல்ல,நான் அந்த பிரம்மத்தின் அம்சமே என்ற அறிவு வராமலும் உள்ள இரண்டும் கெட்டான் நிலையில் நான் இருக்கும் வேளையில் நீ உன் சேவடி என் சென்னியில் பதித்து நீயும் உன் துணைவரும் வந்து ஜாக்ரத்,சொப்ன சுஷுப்தி என்ற மூன்று நிலைகளையும் கடந்த துரீய நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும் ,தாயே” என்று வேண்டுகிறார்.
மேலும் பூரண சரணாகதி தத்துவத்தை விளக்கும் வழியாக பாடுகிறார் அபிராமிபட்டர்:
           நன்றே வருகினும், தீதே விளைகினும்,நான் அறிவது
          ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்,எனக்கு உள்ளம் எல்லாம்
          அன்றே உனது என்று அளித்துவிட்டேன்: அழியாத குணக்
          குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே
“எனக்கு என்று ஒன்றுமில்லை;எல்லாம் உனதே;நல்லது வந்தாலும்,தீயது வந்தாலும், நான் விருப்பு-வெறுப்பு எதற்கும் இடம் கொடேன் என்னை உனக்கே பரம் ஆக்கினேன்”.

பகவான் ரமணர்  இதே கருத்தைத்தான் இந்த சுலோகத்தில் கூறியுள்ளார். குறையோ நிறையோ எல்லாம் பரமனுக்கே சொந்தம்;ஆகவே அவன் தனது கருணா கடாட்சத்தை நம் மீது படரும்படி செய்து அருள வேண்டும் எங்கிறார் பகவான்