Sunday 30 August 2015

திருவோணம்

திருவோணம்-ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்


மற்றுமொரு திருவோணம் வந்து போய்விட்டது. மக்களெல்லாம் பூக்களமிட்டு, புது உடை அணிந்து, பல்சுவை உணவு அருந்தி உற்றார்-உறவினருடன் உல்லாசமாக திருவோணத்தைக் கொண்டாடினார்கள் என்பது உண்மை. திருவோணத்தின் பின்புலம் மஹாபலி சக்கரவர்த்தி தன் நாட்டையும் மக்களையும் அவர்களின் சுபிடச்சத்தையும் காண மீண்டும் பரசுராம க்ஷேத்திரமான கேரளத்திற்கு வரும் நாள் சிங்க மாசத்தில்( ஆவணித்திங்களில்) வரும் திருவோண நாள் என்பது நாமெல்லாம் அறிந்த கதை. நாடு போற்றும் மஹாபலியின் கதையில்  அவர் மீது அசூயை கொண்ட தேவர் பெருமக்கள் மஹவிஷ்ணுவிடம் முறையிட, மஹாவிஷ்ணுவும் வாமனாவதாரம் எடுத்து வந்து மூன்றடி  நிலத்தை தானமாக கேட்க, தானத்தில் தலை சிறந்த மன்னனான,மஹாபலி தனது குலகுருவான சுக்கிராச்சாரியரின் –‘வந்திருப்பது மஹவிஷ்ணு; உனது அழிவிற்காக தேவர்களின் வேண்டுதலை ஏற்று வந்துள்ளார்; அவரது வேண்டுதலை  ஏற்றுக்கொள்ளாதே’- என்ற எச்சரிக்கையையும் உதாசீனப்படுத்தி விட்டு தானம் கொடுக்க ஒத்துக்கொள்கிறார்..மண்ணுலகையும் விண்ணுலகையும்  த்ரிவிக்கிரமனாக உருமாறிய பெருமாள் அளக்க, மூன்றாவது அடிக்கு  தலை குனிந்து வணங்கினார். த்ரிவிக்கிரம பெருமாள் அவர் தலையில் தன் திரு பாதங்களை வைத்து ஆசீர்வதித்தார்; ஒரு வரமும் கொடுத்தார்: ‘ நீ வருடம் ஒருமுறை இதே மாதம் திருவோணம் நாளன்று உன் நாட்டிற்கு வந்து உன் பிரஜைகளை கண்டு செல்லலாம்” இது கதை.
மேற்கூறியது ஒரு ‘myth”. அதன் தோலை உரித்து சற்று உள்ளே சென்று பார்த்தோமேயானால், நாம் காணுகின்ற காட்சியே வேறு. மஹாபலி சக்கரவர்த்தி தலையைக் குனித்து தன்னை அழித்துக் கொண்டதின் மூலம் சிரஞ்சீவியானார்; இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அழிவில் அமரத்துவம் ஒளிந்து கொண்டிருக்கிறது. “நான்” அழிந்தால் நீ சிரஞ்சீவியாகிவிடுவாய் என்ற உண்மை புலனாகிறது.
இதைத்தான் பகவான் ரமண மஹரிஷி,
                             அருணாசலமென வகமே நினைப்பவ
                             ரகத்தைவே ரறுப்பா யருணாசலா
என்றார்.
திரிவிக்கிரம பெருமாளை அகத்தில் அழைத்து இருத்திவிட்டால், “நான்” எனும் “அஹம்” அழிந்துவிடும்; பெருமாள் என்றும் அழிவில்லாத நித்தியனாதலால் நீயும் சிரஞ்சீவியாகிவிடுவாய் என்கிறார் ரமணர்.
இன்னொரு சுலோகத்தில் பகவான் ரமணர் சொல்கிறார்:
                   எனையழித் திப்போ தெனைக் கல வாவிடி
                   லிதுவோ வாண்மை யருணாசலா
எனையழித்து உன்னுடன் என்னை சேர்த்துக்கொள் அருணாசலா என்கிறார் பகவான் இங்கு.
நாமோ மஹாபலி போன்ற பௌதீக சுகங்களின் இடைத்தரகர்களின் லௌகீக மாய வலயில் சிக்கி நமது புலன்களுக்கு தீனி போட்டு க்கொண்டிருக்கிறோம் .நாவிற்கு ருசியான உணவு, மனதிற்கு பிடித்த ஆடை அணிகள், செவிக்கேற்ற சங்கீதம், உல்லாச கேளிக்கைகள் என்று நமது ஐம்புலன்களுக்கும் தீனி போட்டுக்கொண்டிருக்கிறொம்...நாமும் தாற்காலிகமான அந்த இன்பங்களில் மூழ்கி நிரந்தர சாந்தியை இழக்கிறோம்.மஹாபலி சக்கரவர்த்தியின் கதை கற்பிக்கும் பாடத்தை மறக்கிறோம்.
ஆகவே தான் மஹரிஷி ரமணர் கேட்கிறார்:
ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்பொ
தகத்த்னீ யிலையோ வருணாசலா
திரிவிக்கிரம பெருமாளும் மஹாபலியும் நம்முள் எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். .மஹாபலி எப்பொழுது தலை வணங்கி பெருமாளுக்கு இடம் கொடுக்கிறாரோ அப்பொழுது நாம் சிரஞ்சீவியாகிவிடுகிறோம்.மஹாபலி ‘நான்” எனும் அஹந்தையை பிரதிபலிக்கிறார். சத் சிதானந்தனான பெருமாள் எப்பொழுதும் நம்முள் வாமன உருவத்தில் இருந்து கொண்டு தானிருக்கிறார். அவர் த்ரிவிக்கிரம உருவம் எடுக்கும்பொழுது பௌதீக சுகங்களின் ப்ரதீகமான மஹபலி அழிந்து  நாம் சிரஞ்சீவியாகிறோம்.
ஆகவே திருவோணத்தின் தாத்பரியம் என்னவென்றால் நம்முள் இருக்கும் ‘அஹம்’ அழியவேண்டும்; ‘நான்’ தலைகுனிந்து, த்ரிவிக்கிரம பெருமாளுக்கு இடம் அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் நமக்கு முக்தி-மோக்ஷம்.
திருவோண சந்தர்ப்பத்தில் இந்த உண்மையை நாம் நினைத்து உணர்ந்தோமென்றால் நல்லது.

வாழ்க, மஹபலியின் தன்னடக்க; தன்னழிவு; அவர் என்றும் சிரஞ்சீவிதான்; ஏனென்றால் அவர் தன்னுள் இருக்கும் ‘நானை” அழித்துக்கொண்டு பெருமாளுக்கு இடம் அளித்தார்.

Saturday 29 August 2015

ரமணஜோதி 119

ரமணஜோதி 119

நிஜமான சாதனை

விட்டிடிர் கட்டமாம் விட்டிடா துனையுயிர்

விட்டிட வருள்புரி யருணாசலா


'நான் உனை விடாமல் நினைத்துக் கொண்டேயிருக்கவும் அந்த நினைப்பிலேயே உயிர் விடவும் அருள்வாய் அருணாசல.இல்லயேல் என் நிலைமை மிகவும் கஷ்டமாகிவிதும்' என்கிறார் பகவன் ரமணர் இந்த சுலோகத்தில்.
வாழ் நாள் முழுவதும் நல்லதை செய்து கொண்திருந்தாலும் இறக்கும் தறுவாயில் வேண்டாத எண்ணங்கள் மனதில் தோன்றுமேயானால் பிறப்பு-இறப்பு எனும் சம்சார சுழற்சியில் அகப்பட்டுக்கொண்டுள்ள ஜீவாத்மாக்கள் கடைசி நினைப்பை நிறைவேற்றுவதற்காக மறுபிறவி எடுத்து கஷ்டப் பட நேரிடும்.இந்த சுலோகத்தின் பொருளை சிறிது எதிர்மறையாக சிந்தித்துப் பார்த்தால் வாழ் நாள் பூராவும் லௌகீக சுகஙளிலும் இந்திரிய சம்பந்தமான பற்றுதல்களில் கத்துப்பத்து இருந்து விட்டு கதைசிக் களத்தில் மட்டும் படமனை நினைத்துவித்தால் ஜீவாத்மாக்கள் பரமனை சென்றடைந்த்துவிடமுடியுமா?
முடியாது.திட்டவட்டமாக முடியாது.நாம் வாழ்.நாள் முழுவதும் எதன் மீது பற்று வைக்கிறோமோ அது தான் கடைசி காலத்தில் க்னாபகத்திற்கு வரும்.காலம் பூராவும் பரமனை நினைத்துக்கொண்திருந்தால் பரமன் நினைவிற்கு வருவான்
இந்த இடத்தில் பகவத் கீதையில் எட்டாம் அத்தியாயத்தில் பகவன் கிருஷ்ணர் கூறுவது நினைத்துப் பார்க்க தகுதியானது எனறு எண்ணுகிறேன்.
                   யம் யம் வாபி ஸ்மரன்பாவம் ட்யஜத்யந்தே கலேவரம்
                   தம் தமேவைதி கௌந்தேய ஸதா த்த்பாவபாவித:!!
                                     ப.கீ அரத்8 சுலோ 6
இறுதி காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை த்யஜிக்கிறானோ, எப்பொழுதும் அப்பொருளை பாவிப்பவனாகிய அவன், அதையே அடைகிறான்.இந்த் சுலோகத்தில் முக்கியமான பகுதி, “ஸதா த்த்பாவபாவிதா:” எப்பொருளை ஒருவன் தன் ஆயுட்க்காலம் முழுவதும்  நினைத்துக்கொண்டிருக்கிறானோ அந்தப்பொருளையே அவன் இறக்கும் தறுவாயிலும் நினைப்பான்.ஆஅவர் ஆயுட்காலம் முழுவதும் பரமனை நினைந்து கொண்டு ஆத்மக்னானத்திற்காக முயல வேண்டும்.அப்பொழுது தான் தேகத்தை விட்டு ப்போனதும் அவனுக்கு முக்தி கிடைக்கும்னமது கர்மாக்கள் நம் ஆத்மாவில் மிகுந்த தாக்கத்தை உள்வாக்குகின்றன். ஒருவன் வாழ்னாள் பூராவும் பௌதீக சுகங்களுக்காக அலைந்து கொண்டிருந்து விட்டு சாகும் தறுவாயில் ஆத்ம ஞானத்தை வேண்டினால் ஆத்ம ஞானம் கிடையாது என்பது மட்டுமல்ல அவனாலந்த நேரத்தில் ஆத்ம ஞானத்தைப் பற்றி சிந்திக்க்கூட  இயலாது .அவன் வாழ் நாள் பூராவும் எதைத் தேடினானோ அது தான் அவன் சிந்தனையில் மேலோங்கி நிற்கும்.ஏனென்றால் பௌதீக சுகங்களில் ஒருவன் ஒருனாளும் திருப்தி காணமுடியாது.கானல் நீரைத் தேடி பாலைவனத்தில் ஓடும் மனிதனின் நிலை தான் அவனது நிலை.சாகும்பொழுது அவன் நிஜ நீரை—உண்மையான சாந்தியை அடைய முடியாது.ஆகவே நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்பொழுதே முக்திக்கு வழி தேட வேண்டும்; ஞானத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.அப்பொழுது தான் ஒருவேளை நமது இந்த ஜன்மத்தில் ஆத்மசாக்ஷாத்காரம் காணமுடியவில்லை என்றாலும் மறுபிறவியிலாவது அடைய முடியும்.
இதற்கு முந்தைய சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் இந்தக் கருத்திற்கு பலமான அஸ்திவாரம் அமத்திருக்கிறார்.
              अन्त्काले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् !
              य्: प्रयति स मध्भावम् याति नास्त्यत्र सम्य्: !!
                அந்தகாலே ச மாமேவ ஸ்மரனமுக்த்வா கலேவரம் !
              ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்ட்யற்ற சம்சய:!!
அந்தகாலே ச  கடைசிகாலத்திலும் ,மாம் ஸ்மரன் எனை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஸ மத்பாவம் யாதி-எனது குண்னலங்களை பெறுகிறார்கள்.
ச:-- உம் கடைசிகாலயத்திலும் என்ற பத்த்தின் மூலம் பகவான் எவனொருவன் வாழ்னாளிலும் தொடர்ந்து இந்த உடல நீக்கின்ற கடைசி காலத்திலும் கூட என்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அதாவது விடாது என்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொல்கிறார்.அவர்கள் என் குண்னலங்களை பெறுவர் என்றால் அவ்ர்கள் நானாகவே ஆகிவிடுகிறார்கள்.பிரம்மத்தில் லயித்துவிடுகின்றனர் என்று கூறுகிறார்.சாதாரணமாக வாழ்னாளில் பரமனை நினைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு கஷ்டமல்ல. ஆனால் உடல் விட்டு
போகப் போகிறோம் என்ற்றியும் பொழுது இழப்பின் தாக்கம் சிறிது பாதிக்கத்தான் செய்யும்.இனிமேல் இந்த உடலால்- இந்திரியங்களால் ஒரு சுகமும் அனுபவிக்க முடியாது என்ற வெளிப்பாடு உண்டாகும்பொழுது வருத்தம் மேலோங்கி வரும்.இன்னும் கொஞ்சம் நாள் வாழ்ந்தால் இந்திரிய உத்பன்ன்ங்களான சுகங்களை அனுபவிக்கலாமே என்று தோன்றத்தான் செய்யும்.அப்படிப்பட்ட எண்ணங்கள் எழமல் அப்பொழுதும் ஈசுவரனை நினைக்கின்றவர்கள் ஈசுவரனாகவே ஆகிறார்கள்.
பரமன நினைப்பது—பிரம்மத்தை-நினைப்பது என்றால் என்ன? பிரம்ம்ம் ஒரு பொருள் அல்ல; நினைத்துப் பார்ப்பதற்கு.பிரம்மத்தை அறிவது என்பது மற்றஅறிவ் போல அல்ல. ‘நானே பிரம்மம்’ என்பது ஒரு வெற்று வாக்கியமல்ல.அது ஆத்ம ஞானம்.’நான் யார்’ என்ற உணர்வு.அதை நினைத்து பார்க்க முடியாது.ஒரு முறை அதை உணர்ந்து விட்டால் அது நம்மை விட்டுப் போகாது. அதை மறக்கவும் முடியாது; நினைக்கவும் வேண்டியதில்லை.ஆத்ம ஞானம் ஏற்பட்டவர்களுக்கு மரணம் எந்த இழப்பையும் உளவாக்குவதில்லை.ஸ்மரனை என்ற பத்த்தை பகவான் ஒரு அலங்காரசொல்லாகத்தான் பயன்படுத்தியுள்ளார்.
ய ப்ரயாதி என்ற சொற்றொடர் மூலம் உயிர்-ஆத்மா எங்கோ பயணமாகிறது என்று அர்த்தம் கொள்ளலாகாது.பலூனிலிருந்து வெளிவரும் காற்று எங்கே போகிறது? அதன் பிறப்பிடமான வாயுவில் லயிக்கின்றது. நதி காட்டிலும் மேட்டிலும் ஒழுகி கடைசியில் சமுத்திரத்தில் கலக்கின்றது. சமுத்திர நீர் சூரியனின் தாபத்தினால் ஆவியாகி மேகமாகி, வாயுவினால் உந்தப்பட்டு மலைகளில் முட்டி மோதி மழையாக பூமியை வந்தடைந்து காட்டிலும் மேட்டிலும் பயணித்து அதன் உறைவிடத்திற்கு வந்து சேருகிறது.அதுபோல் ஜீவாத்மாக்களும் 84 லக்ஷம் பிறப்புகளுக்கு பின் பிரம்மத்துடன் கலக்கிறது.இது இறப்பல்ல; அங்கே ஒரு இழப்பும் நேருவதில்லை;ஆகவே வருந்துவதற்கு ஏதுவுமில்லை.
இதைத்தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் ஜீவாத்மாவின் வேண்டுதல் உருவத்தில் அழகாக தந்துள்ளார்.

 விடுவதில்—இந்த தேகத்தை விடுவதில் எந்த கஷ்டமுமில்லை; என்னை கைவிடாமல் உன்னுடன் ஐக்கியமாக அருள் புரிவாய் அருணாசலா என்கிறர்.

ரமணஜோதி 118

ரமணஜோதி 118

ஞானம்-அக்ஞானம்-அன்யதா ஞானம்


     வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென்
      வாழ்விழந்தேந் தேனரு ளருணாசலா
“நீ வா என்றழைத்தவுடன் நான் உன்னுள் ஐக்கியமாகிவிட்டால் என்னையே இழந்தவனாகி விடுகிறேன்.அது உன் அருளேயருணாசலா” என்று பகவான் இந்த சுலோகத்தில் சொல்லுகிறார்.
இன்னொரு விதத்தில் சொல்லப் போனால், ‘ வா என்று நான் அழைத்தேன்; நீ என்னுள் வந்து பிரேகவேசித்தாய்; நான் இல்லாமலாகிவிட்டேன்.அதுவும் உன் அருளே அருணாசலா”
நான் யார் என்று விசாரித்தறிந்து நானே பிரம்மம் என்ற வெளிப்பாடு உண்டாகின்ற பொழுது ‘நான்’ இல்லாமலாகிவிடும். அஹம் நாசமடையும் பொழுது ஆத்மா பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறது என்கிறார் பகவான்
இன்னும் சற்றே ஆழ்ந்து சிந்தித்தோமென்றால் ஒன்று புரியும் எல்லா ஜீவன்களும் சுதந்திரத்திற்க்காக—முக்திக்காக ஏங்குகின்றன. அடுத்தவன் நம்மை விட பெரிதாக வளர்ந்து நம்மை கீழ்ப்படுத்திவிடுவானோ என்ற பயத்தின் விளைவாக ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வைக்கின்றான் மனிதன். ஒவ்வொரு நாடும்.அதே போல் ஒவ்வொரு மனிதனும் நாளைக்கு மற்றொருவனிடம் கையேந்தி நிற்க வேண்டி வந்து விடுமோ என்ற அடிப்படை அச்சத்தின் விளைவாக தன தான்யங்களை சேர்த்து வைக்க முயலுகிறான். எடற்காக்? நமக்கு யாரையும் அண்டிப் பிழைக்கவேண்டி வரக்கூடாது; அதனால் ஏற்படக்கூடிய அசாந்தி உண்டாகக் கூடாது; என்பதற்காக. ஆனால் எவ்வளவு சொத்து சேர்ந்தாலும் எவ்வள்வு பலசாலியாக இருந்தாலும் அவன் எதிர்பார்க்கின்ற சாந்தியும் ஆனந்தமும் கிடைப்பதில்லை, அந்த முயற்சிகளிலிருந்து கிடைக்கின்ற திருப்தியும் சந்தோடமும் அனித்தியம் என்று அவன் உணருவதில்லை.
ஆனால் உண்மையான சந்தோடமும் சாந்தியும் தன்னிடமுள்ள பொருள்களை தியாகம் செய்யும்பொழுது தான் கிடைக்கும் என்று அவன் புரிந்து கொள்வதில்லை.
திருவாரூரில் குடிகொண்டுள்ள ஈசுவரனுக்கு தியாகேசன் என்று பெயர். அவனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது? தேவர்களும் அசுரர்களும் பாலாழியை மந்தர பர்வதத்தை மத்தாகவும் வாசுகி எனும் சர்ப்ப ராஜாவை கயிறாகவும் எடுத்துக்கொண்டு கடைந்தபொழுது ஆலகால விஷம் முதலில் கொப்புளித்து வந்தது. அதைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் ஓடினார்களும் பரமசிவன் அவர்களை காப்பதற்காக தன் ஜீவனுக்கு ஏற்படக்கூடிய பேரபாயத்தைக் கூட பொருட்படுத்தாமல் ஆலகாலத்தை விழுங்க தயாரானார்.அந்த தியாக உணர்வினால் அவர் தியாகேசன் என்றழைக்கப்படுகின்றார்.
நாம் பஸ்ஸில் போகின்ற பொழுது நமக்கு வசதியாக ஒரு இருக்கை கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம்.நமதருகில் ஒரு கால் முடியாத வயோதிகர் நிறு கொண்டு வருவதை பார்க்கின்றோம்.நம் மனதுள் ஒரு போராட்டம். நமது மனசாட்சியின் குரல் அவருக்கு நமது இருக்கையை விட்டுக்கொடுக்க தூண்டுகிறது .நமது சுயனல விரும்பியான மனது ‘ நாம் விட்டுக் கொடுப்போம்; அவரும் உடகார்ந்து வருவார்; அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவார்; வேறொருவர் அந்த இருக்கையிலமர்ந்து விடுவாற்; நாம் ஏமாளியாகி கடைசி வரை நின்று கொண்டே வர வேண்டியது தான்”. என்று வாதாடுகிறது.
சுயநலவாதம் வென்று நாம் வசதியான பயணத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று படுத்து உறங்க முயலும் பொழுது நமது மன சாட்சி விழித்துக் கொண்டு, “நாம் தவறு செய்து விட்டோம்’ என்று குத்திக்காட்ட ஆரம்பிக்கும். சாந்தியை இழந்து, உறக்கத்தையும் இழந்து தவிப்போம்.’தாற்காலிகமான வசதிக்காக ஒரு வயோதிகரை கஷ்டத்துக்குள்ளாக்கிவிட்டோமே’ என்று சங்கடப் பட நேரிடும்
நேர்மாறாக இருக்கையை அவருக்கு விட்டுக்கொடுத்து விட்டு சற்று நேரத்திற்கு கஷ்டபட்டுக்கொண்டு பயணித்து விட்டு வீட்டுக்கு வந்தால் சாந்தியும் நல்ல உறக்கமும் கிட்டும்.தாற்காலிக சுகத்தை தியாகம் செய்ததினால் நமக்கு கிடைக்கின்ற சாந்தி அலாதியானது.
இவ்வள்வு ஏன்? எல்லோருமே விரும்புவது சுஷுப்தியை, நி.ம்மதியான உறக்கத்தை. உறக்கத்தில் நம்முடன் பதவி, பெயர், புகழ், சொத்து, செல்வம் எதுவும் இல்லை.ஏன்? நம் உடல் கூட இருப்பது தெரியாது. அப்பொழுது—ஒன்றுமே இல்லாத பொழுது  பரமானந்தம் கிடைக்கிறது.
எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களை நாம் மஹாத்மா என்கிறோம்.
மற்றெல்லா ஜீவராசிகளும் இயற்கை—பிரகிருதி—யோடு இணக்கமாக வாழும்பொழுது மனிதன் மட்டும் இயற்கையை பணிய வைக்கவேண்டும்; வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்று முயன்று தோல்வியை தழுவுகிறான்; அசாந்தியை தேடிக்கொள்கிறான்.
ஆனால் எந்த விதமான செயற்கையான ஆயுதங்களும் இல்லாமல், வெறும் குடிசைகளில் வாழ்ந்துகொண்டு கொண்டு இயற்கையில்  கிடைக்கின்ற காய்கனிகளிலும் சூரிய கிரணங்களை அனுபவித்து இயற்கயான காற்றை சுவாசித்துக்கொண்டு விசார மார்க்கத்தில் சஞ்சரித்து நித்திய சாந்திக்கான மார்க்கங்களை  நமக்கு எடுத்துரைத்த பாரத தேசத்து முனிகளை- மஹரிஷிகளை நாம் மஹாத்மா என்று சொல்வதில் என்ன தவறு?
அவர்கள் இயற்கையை வென்றவர்கள்; பீரங்கிகளோ அணு ஆயுதங்களோ இல்லாமல் தாங்கள் பெற்ற ஞானத்தின் மார்க்கமாக.
 இந்த ப் பற்றி பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்.
     வீதராகபயக்ரோதா மன்மயா மாமுபாஸ்ரீதா:!
   பஹவோ ஞானதபஸா பூதா மத்பாவமாகதா: !!
                ப.கீ அத் 4 சுலோ 10
ஆசை,அச்சம், சினம் நீங்கியவர்களாக என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து, ஞானதபசால்  புனிதர்களாய் என் இயல்பை எய்தினவர் பலர்.
இஹலோக சுகபோகங்களையெல்லாம் தியாகம் செய்துவிட்டு பரமனோடு ஐக்கியமானவர்கள் ஞானிகள்; அவர்கள் பரபிரம்மமே ஆகிவிடுகிறார்கள்
பகவத் கீதையில் தெய்வீக குணங்களை விவரிக்கும்பொழுது கிருஷ்ணர் கூறுவார்:
          அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: சாnதிரபைசுனம்!
     தயா பூதேஷ்வலோலுப்தவம் மார்தவம் ஹ்ரீரசாபலம்!!
                                ப்.கீ.அத்.16 சுலோ 2
யாரையும் ஹிம்சிக்காமல்—மனஸா வாசா கர்மணா- ஹிம்ஸிக்காமல்-இருப்பது, உண்மையாக இருப்பது, கோபப்படாமல் இருப்பது, தியாகம்செய்வதற்கான மனம், சாந்தி,அபைசுனம்-கோள் பேசாமல் இருப்பது,,மற்ற ஜீவராசிகளிடம் கருணையுடன் செயலாற்றுவது, பௌதிகசுகபோகங்களில் இச்சையற்று இருப்பது இனிமையும் மென்மையுமாக வர்த்தித்தல்,சபலமின்மை இதெல்லாம் தான் தெய்வீக குணங்கள் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
நாம் ஏன் மற்றவர்களுக்கு-மற்ற ஜீவராசிகளுக்கு தீங்கு செய்கிறோம்? அவை நம்மிலிருந்து வேறானவை;அவை நம்முடையதோ தெய்வத்தினுடையதோ அமசமில்லை என்ற எண்ணம் மேலோங்கும்பொழுது தீங்கு செய்கிறோம்.எல்லா ஜீவராசிகளும் நம்முடைய—பிரம்மத்தினுடைய அம்சம் தான் என்று நாம் உணர்ந்து விட்டால் நமக்கு நாமே தீங்கு இழைத்துக்கொள்ள மாட்டோமல்லவா?
நமக்கு ஏன் மற்றவர்களிடம் கோபம் வருகிறது? நாம் விரும்பும் பொருள் கிடைக்காத பொழுது நமக்கு கோபம் வருகிறது. நாம் வேண்டின பொருள் இன்னொருவருக்கு கிடைக்கும் பொழுது கோபம் வருகிறது. கோபம் நமது இச்சை மறுக்கப்படும்பொழுது வருகிறது ராகத்தை- இச்சையை தியாகம் செய்து விட்டால் பற்ற்ற்று இருந்து விட்டால் ஏமாற்றம் உண்டாகாது; கோபமும் உண்டாகாது.
பகவான் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் கூறியதை இங்கே நினைவு கூருவது நல்லது.. சுலோகம் 62- 63
த்யாயதோ விஷயான்பும்ச: சங்கஸ்தேஷூபஜாயதே !
ஸங்காத் ஸஞ்சாயதே காம: காமாத் க்ரோத: அபிஜாயதே !!  
க்ரோதாத்பவதி ஸம்மோஹ:சம்மோஹாத்ஸ்ம்ரிதிவிப்ரம: !
ஸ்ம்ரிதி-ப்ரமாசாத்புத்தினாசோ புத்தினாசாத்ப்ரணஸ்யதி !!
பொருள்களை நினைப்பதால் அவைகளின் மீது பற்றுண்டாகிறது.பற்று ராகமாக-ஆசையாக பரிண்மிக்கிறது.ஆசை நீறைவேறாத பொழுது சினமாக உருவெடுக்கிறது.
சினம் மனத்தை பேதலிக்க செய்கிறது; நம்மால் சரியான முடிவெடுக்க முடியாமல் போகிறது;அப்படிப்பட்ட குழம்பிப் போன மன  நிலையிலிருந்து
மறதி எனும் வியாதி, அதிலிருந்து புத்தி நாசம் பிறகு சர்வனாசம் சம்பவிக்கிறது.
ஆக எல்லாவற்றிற்கும் காரணம் ‘மற்ற’ பொருள்களின் மீது நமக்குண்டாகும் பற்று தான்.           
 “நான்’ என்பது பிரம்ம்மே ; என்னையின்றி வேறொன்றில்லை” என்ற ஞானம் நமக்கு உண்டானால் “மற்ற” என்ற உணர்வு அற்றுப் போய்விடும்; பாசமும் அற்றுப் போய்விடும்.
ஆனால் நம்முடைய உண்மையான சொரூபமான பிரம்மம் முப்பரிமாணமாக நமக்கு காட்சியளிக்கிறது. காண்பவன்,காண்கின்றபொருள், காணுகின்ற செயல் என்ற முப்பரிமாணத்தினால் ஒரே பொருள் நமக்கு இந்த பிரபஞ்சமாக காட்சியளிக்கிறது. இது நம்முடைய அக்ஞானத்தினால் தான்.அக்ஞானத்தின் காரணமாக இந்த பரஸ்பர பந்தம் உளவாகிறது.
இது அக்ஞானம் என்று கூறுவது தவறு. இதுவும் ஒரு ஞானமே.இதை நமது முன்னோர்கள் “அன்யதா ஞானம் என்று கூறினார்கள்.. ஒரே பொருளை பலதாக காண்பது, கயிறை பாம்பாக காண்பது, கடல் சிப்பிகளை வெள்ளியாக காண்பது, நல்லவர்களை கெட்டவர்களாக காண்பது இதெல்லாம் அன்யதா ஞானம் தான்.
ஆகவே தான் பகவத் கீதையின் 16 ஆம் அத்தியாயம் இரண்டாம் சுலோகத்தில் கிருஷ்ண பகவான் “அபைசுனம்” என்றொரு வார்த்தையை உபயோக படுத்தியுள்ளார்.
“பைசுனம்” பிறரைப் பற்றி புறம் பேசுதல் என்று பொருள். மற்றவர்கள் என்னசெய்கிறார்கள் என்பதில்த்தான் லௌகீக மனிதர்களின் பார்வை.
அடுத்தவர்களைப் பற்றி யோசிக்காமல் இருப்பது “அபைசுனம்”.
இந்த குணம் தெய்வீகமானது.
ரமண பகவான் ‘பைசுன” குணத்தை பலமுறை பக்தர்களிடம் கண்டித்து பேசியுள்ளார்.
ஒரு முறை ஒரு பக்தர் பகவான் சன்னிதியில் பகவானின் உபதேசங்களை செவிக்கொள்ளாமல் தூங்கிவிடுவார், இதைக் கண்ட இன்னொரு பக்தர் பொறுத்து பொறுத்து பார்த்தார். ஒரு  நாள் பகவானிடம் உறங்குகின்ற பக்தரை சுட்டிக்காட்டி, ‘பகவான் அவரை கண்டிக்க வேண்டும்” என்று வேண்டினார்.
“ அப்படியா சங்கதி! எத்தனை நாளாக இப்படி செய்கிறார்?” என்று பகவான் வினவினார்.
“ நான் நாலு நாளைக்கு முன் வந்தேன். அன்றிலிருந்து இப்படித்தான் செய்கிறார். வர வேண்டியது; உட்கார வேண்டியது.பகவான் பேச்சை ஆரம்பித்த்தும் உறங்க ஆரம்பித்து விடுகிறார்.”
“நீர் எதற்கு ஓய் வந்திருக்கிறீர்? மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிடவா? இல்லை என் பேச்சைக் கேட்பதற்கா? அவரவர்கள் வேலையை பார்க்கணும். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும் .உமக்கு என்ன ஓய் நஷ்டம்?”
கேள்வி கேட்ட பக்தருக்கு தன் தவறு புரிந்த்து.
இதே  போல் ஹிடலரைக் குறித்து ஒரு பக்தர் கேள்வி கேட்டார்.
பகவான் சொன்னார்,” மற்றவர்களைப் பற்றி அபிப்ராயம் சொல்ல  நான் யார்? அவரவர்களுக்கு விதிக்கப் பட்ட கருமங்களை அவரவர்கள் செய்கிறார்கள். அதில் மற்றவர்கள் கருத்து சொல்வது சரியாகாது”
மஹாபாரத்த்தில் துரியோதனன் துர்குணங்களைக்கொண்டவன்; சாமானிய மனிதர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவன். அவன் மரிக்கும் தறுவாயில் கிருஷ்ணர் அவன் அருகில் சென்றார். அப்பொழுது துரியோதன்ன் கிருஷ்ணனிடம் கேட்டான்,” கிருஷ்ணா, நான் எனக்கிட்ட கருமத்தை நன்றாக செய்தேன?”
துரியோதனன் பாண்டவர்களுக்கும் முன்னால் சுவர்க்கத்தை அடைந்த்தாக மஹாபாரதத்தின் முடிவில் கூறப்படுகிறது.
ஆகவே முக்தியென்றால் என்ன என்பதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது பௌதிக-லௌகீக வஸ்துக்களிடம்  நமக்குள்ள பற்றுதலை விடுதலே ஆகும்.அப்படி விடுவதற்கு, நம்முடைய உண்மையான சொரூபம் அத்வைதமான பிரம்ம்மே என்று உணர வேண்டும்.காண்பவன், காண்ப்படும் பொருள், காட்சி என்ற ‘த்ரிபுடி” அக்ஞானத்தை விட வேண்டும்.
இது அக்ஞானமேயல்ல; இதுவும் ஒரு விதமான ஞானமே. இது தான் அன்யதா ஞானம் என்பது.ஒரு பொருளை மற்றொன்றாக காண்பது. ஒன்றை பலதாக காண்பது என்பதைத் தான் அன்யதா ஞானம் என்கிறார்கள்.இதன் அழிவு தான் முக்தி. முக்தியென்பது எல்லாம் ஒன்றே என்ற ஞானம் அடைவதே.
ஆகவே தான் வேதங்களில் “தரதி சோகமாத்மவித்”—எவனொருவன் ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறிகிறானோ அவன் சோகமயமான சம்சாரசாகரத்தை கடந்தவனாகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கூறியுள்ளார்கள்,” ப்ரம்மவித் ப்ரம்மைவ பவதி” என்று.
பிரம்ம்மத்தின் உண்மையான சொரூபத்தை அறிந்தவன் பிரம்ம்மாகவே ஆகிவிடுகிறான்.
இதையே தான் பகவான் ரமணர்,ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள சுலோகத்தில் கூறியுள்ளார்,’’ நீ என்னுள் வந்து சேரும்பொழுது நானில்லாமலாகி விடுகிறேன்” என்று
வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென்
      வாழ்விழந்தேந் தேனரு ளருணாசலா


     

ரமணஜோதி 117

ரமணஜோதி 117

உனை நாடியவருக்கு படியளப்பாய் அருணாசலா


                   வரும்படி சொலிலை வந்தென் படியள
                  வருந்திடுன்  றலைவிதி யருணாசலா
“ அருணாசலா, நீ என்னை வரும்படி அழைக்கவில்லை; இருந்தாலும், நான் உன்னை நாடி வந்துள்ளேன் ;எனக்கு படியளக்க வேண்டியது உன் கடமை; அதில் நீ வருந்தி பயனில்லை.” என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
பகவானுக்கு பரமனிடம் உள்ள உரிமை ஒரு நாயகிக்கு நாயகனிடமுள்ள உரிமை போல்; ஒரு பிரஜைக்கு அரசனிடம் உள்ள உரிமை போல், ஒரு பக்தனுக்கு பகவானிடம் உள்ள உரிமை போலாகும்.
பரமன் நம்மை அழைக்க வேண்டிய அவசியமில்லை;அழைப்பு எல்லோருக்கும் எப்பொழுதும் உளது.அவனை எப்பொழுது எப்படி நாடி செல்கிறோம் என்பது அவரவர் பிராப்தத்தைப் பொறுத்தது. முன்சன்ம கர்ம பலனைப் பொறுத்தது.
ஆனால் நாம் பகவானை-பரமனை நாடிப் போய் விட்டால், நம்மாய் காப்பது அவன் கடமை.கண்டிப்பாக அவன் நமக்கு அடைக்கலம் அளித்தே ஆக வேண்டும்.அளிப்பான். அதில் ஐயப் படவேண்டியதில்லை.
அவனை நாடிச் சென்றால் முக்தி கிடைக்குமா,கிடைக்காதா என்ற சந்தேகத்திற்கு இடமே கிடையாது. ஏனென்றால் ‘அஹம் நாஸ்தி’ என்ற ஞான,ம் பிறந்து விட்டால் நான் அவனில் அடைக்கலமாகி விடுகிறோம். அவனே ‘நானா’கியிருக்கும்பொழுது.-‘தத்துவமஸி’- யார் யாருக்கு அடைக்கலமளிக்கிறது;  யார் யாருக்கு படியளப்பது? நித்திய சாந்தியும் பரமானந்தமும் ஆத்மஞானம் உண்டான உடனையே தோன்றிவிடும்.ஆகவே ‘நான் யார்’ என்ற விசார மார்க்கத்தில் சென்று ஆத்ம ஞானம் தேடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார் பகவான் ரமணர்.
இதையே கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
          யஜ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவா!
          யேன பூதான்யசேஷேண த்ரக்ஷ்யஸ்யாத்மன்யதோ மயி !!
                           ப.கீ. அத் 4 சுலோ 35
ஞானத்தைப் பெற்றபின் ஒருவன் மன கலக்கம் அடையமாட்டான்; எல்லா உயிர்களிலும் தன்னையே காண்பான்;எல்லா உயிர்களையும் தன்னையும் பரமனிடத்தில் காண்பான். எல்லாம் ஒன்றே; ஒன்றன்றி வேறில்லை என்ற பரம சத்யத்தை புரிந்து கொள்வான்.
ஒன்றாக காண்பது ஞானம்;பலவாக காண்பது அக்ஞானம் “ என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர்
மேலும் பகவான் கிருஷ்ணர் கூறுவார்,” ஞானம் அடைந்தவன், முன்னால் செய்த எல்லா பாபங்களையும் அழித்தவனாகிறான். பாப பலன்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆத்ம ஞானம் பெறுவது ஒன்றே மார்க்கம்.ஆத்ம ஞானம் என்ற தோணி கிடைத்து விட்டால் எந்த பாப சமுத்திரத்தையும் கடந்து விடலாம்
                   அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம: !
                   ஸர்வம் ஞானபலவேனைவ வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி!!
                     ப.கீ. அத் 4 சுலோ 36
சுடர் விட்டெரியும் ஞானாக்னியானது எல்லா கர்ம பலங்களையும் எரித்து சாம்பலாக்கிவிடும்;ஏனென்றால் எல்லாம் ஒன்றே; எல்லா ஜீவாத்மாக்களிலும் பரமாத்மாவே இருக்கிறான் என்ற உண்மை புரிந்துவிட்டால் தன்னலம் என்பதற்கு இட்மேயிராது, பொது நலமே தன்னலமாகி விடும்.பொதுவுடமை வாதத்திற்கெல்லாம் பிறப்பிடம் கிருஷ்ண்பகவானின் இந்த அருள் வாக்கு தான். பொதுவுடமைக்கு தந்தை காரல் மார்க்சோ ஏங்கல்ஸோ லெனினோ அல்ல; கிருஷ்ண பகவான் தான்

ஸமித்தோ அக்னிர்பஸ்மஸாத்க்ருதோ அர்ஜுன !
ஞான-அக்னி ஸர்வ-கர்மாணி பஸ்மஸாத்க்ருதே ததா!!
                ப.கீ. சுலோ 37
கிருஷ்ணர் மேலும் சொல்லுவார்:
          யோஅந்த: ஸுகோஅந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய: !
          : யோகி ப்ரஹ்மனிர்வாணம் ப்ரஹ்மபூதோஅதிக்ச்சதி !!
ஆத்ம ஞானத்தை அடைந்த யோகிக்கு வெளியுலக விஷயங்கள் ஒன்றும் தேவையில்லை;அவன் ஆத்மாவில் மூழ்கி, ஆத்மாவிலேயே ஒளியைக் கண்டு தானே அந்த பிரம்மமாகி விடுகிறான்.இதுவே பிரம்ம நிர்வாணம்.
அப்படிப்படவனுக்கு யார் படியளக்க வேண்டும்? ஆகவே அருணாசலா “எனக்கு அந்த ஆத்ம ஞானத்தை அளிப்பது உன் கடமை. அழையாமலேயே உன்னை நாடி வந்துள்ளேன்.ஆத்ம ஞானம் எனும் ஆசியை நீ எனக்கு அருள்வாய் .அதில் எனக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை” என்கிறார் ரமண பகவான்.
.