Wednesday 19 November 2014

ரமணஜோதி 17

அன்னையின் அருள்

ஔவைபோ லெனக்குன் னருளைத் தந்தெனை
யாளுவ துன்கட னருணாசலா

முன்னொரு சுலோகத்தில் பகவான் ரமணர் கூறினார் , 

ஈன்றிடுமன்னையிற் பெரிதருள் புரிவோ
யிதுவோ வுனதரு ளருணாசலா

  இந்த சுலோகத்தில் ஈசனை அன்னையாகவே கருதி வேண்டுகிறார்.
அன்னை ஒருவள் மட்டும் தான் தன் பிள்ளைகளுக்குத் தன் அருளை,ஆசியை கேட்காமலேயே கொடுப்பவள்.
அது அன்னையின் இயல்பு.
பகவான் தனக்கு அருணாசலரிடம் இருக்கும் நெருக்கம் காரணமாக தாயின் அந்த இயல்பை கடன் என்று கூறுகிறார்.

ஈசன் தன்னில் பாதியையே அந்த பராசக்திக்கு நல்கி அர்த்த நாரீஸ்வரன் ஆனார்.
திருமாலோ மஹலக்ஷ்மியை தன் திரு மார்பிலேயே நிரந்தரமாக குடியிருத்தியதின் காரணமாக ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றான்.
அதே போல் அருணாசலன் நமக்கும் அருளவேண்டும் என்பது இன்னொரு விளக்கம்.

அர்த்தனாரீஸ்வரர் என்றதும் பகவான் ரமணர் சென்னையிலிருந்து ஆசிரமத்திற்கு சென்றிருந்த ரமண பக்தர் ஜகதீஸ்வர சாஸ்திரிகளுக்கு அருணாசலரருக்கு அர்த்த நாரீஸ்வரர் என்ற பெயர் எப்படி வந்தது என்று விளக்கி கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு தடவை கைலாய சிகரத்தில் பரமேஸ்வரன் சுகாசீனராக இருந்த போது பார்வதி பின்னாலிருந்து வந்து வேடிக்கையாகத் தன் கைகளினால் ஒரு க்ஷணம் அவர் கண்களைப் பொத்தினாள்.
உடனே ஈஸ்வரனுடைய இரு கண்களான சூர்ய சந்திரர்கள் பிராகாசமிழந்தன. உலகமெல்லாம் இருளில் மூழ்கியது. பிரஜைகள் அல்லற் பட்டார்கள். பக்தர்கள் ,ஹே ஈஸ்வரா! இதென்ன அகால பிரளயம்! இதிலிருந்து எம்மை காக்க வேண்டும் என்று வேண்டினர்.
பரமசிவன் நெற்றிக்கண்ணை சட்டெந்த் திறந்து பிரகாசம் உண்டாக்கிப் பிரஜைகளின் துன்பத்தை நீக்கினார்.
பார்வதி பயந்து போய் கைகளை  அகற்றினாள். பரமேஸ்வரர் ஒன்றும் சொல்லவில்லை..அவர் கருணாமூர்த்தியல்லவா! இருந்தாலும் தேவி நடுங்கினாள்.
சுவாமி நயத்துடன்,தேவி,உனக்கு இது வேடிக்கையே.ஆனால் என் கண்களை மூடியதால் பிரஜைகள் எவ்வளவு தவித்து போனார்கள் ,பார்த்தாயா?
குழந்தைகள் ஒரு க்ஷணமேயானாலும் துன்பத்திற்குள்ளாகி விட்டார்களே என்று அந்த தாயுள்ளம் வேதனைப்பட்டு பாவத்திற்கு பரிகாரம்.தேடி ஈசுவரனுடைய அனுமதியுடன் தெற்கு நோக்கி பயணமானாள்.
அப்படிச் செல்லும் போது காசியில் கொடூரமான பஞ்சம் தலை விரித்து ஆடுவதைக் கண்டு அந்த தாயுள்ளம்  வேதனை தாங்க முடியாமல் உடனேயெ ஒரு மாளிகை எழுப்பி அன்னபூரணா என்ற பெயரில் பசித்து வருபவர்களுக்கெல்லாம் உணவளிக்க ஆரம்பித்தாள்.
காசி ராஜனே வியக்கும் அளவுக்கு அன்னதானம் நடந்தது. தன்னால் முடியாதது ஒரு பெண்மணியால் எப்படி முடிகிறது என்று வியந்து காசிராஜன் மாறு வேடத்தில் அன்னபூர்ணா விடம் வந்து சேர்ந்தார்.
லோகமாதாவிடம் சென்று நீங்கள் என்னிடம் தானியத்தை கொடுத்தால் நானே சோறாக்கிப் போடுவதர்க்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
அன்னையோ உனக்கு வேண்டுமென்றால் உணவு வாங்கிப் போ; தானியமெல்லாம் கொடுக்க இயலாது. உணவளிப்பது எனது கடைமை என்றாள்...அதை அடிப்படையாகக் கொண்டு தானோ என்னவோ பகவான் ரமணர்,என்னையாளுவது உன் கடன் அருணாசலா என்றார் போலும்.
காசி ராஜனுக்கு உண்மை விளங்கி, அன்னபூரணியை அங்கேயே தங்கி இருக்கும்படி வேண்டினார்.
அம்மை அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.ஆனால் காசி நகரத்தை ஆசீர்வதித்து இன்றிலிருந்து மழை பெய்யும் மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நான் இங்கிருந்து போனாலும் என் சாந்நித்தியம் என்றும் இங்கே இருந்து கொண்டேயிருக்கும் என்று ஆசீர்வதித்தாள்.
அந்த இடம் இன்றும் அன்னபூர்ணாலயம் என்ற பெயரால் அறியப்பட்டு வருகிறது.
காசியிலிருந்து புற்பட்ட தேவி காஞ்சி வந்து மணலில் சிவலிங்கம் அமைத்து பூஜித்தாள்.
பாப விமோசனம் அடைந்தாள்.
அங்கு காமாக்ஷியாக ரூபம் கொண்டு பிரசித்தமானாள்.
அங்கிருந்து புறப்பட்டு ரிஷப வாஹனத்தில் ஏறி அருணாசலம் வந்தடைந்தாள்.
திருவண்ணாமலையில் பவளக்குன்றின் அடிவாரத்திலிருந்த கௌதமரின் ஆசிரமத்திற்கு வந்தாள். (பகவான் ரமணரும் பல நாட்கள் பவளக்குன்றில் இருந்திருக்கிறார்.)
கௌதமர் அந்த நேரம் ஆசிரமத்தில் இல்லை. கௌதமரின் புதல்வன் சதானந்தர் தான் இருந்தார்,
சதானந்தருக்கு தேவியைப் பார்த்ததும் தாய்ப் பாசம் பெருக்கெடுக்க,அம்மா,அம்மாஎன்றழத்து அர்க்யபாத்யங்களால் உபசரித்தார்.
அங்குள்ள செடிகொடிகள்கூட தாயைக் கண்ட சந்தோஷத்தில் பூத்து குலுங்கின. தேவிக்கு புஷ்பாபிஷேகம் செய்தன.
பிறகு கௌதமரின் அறிவுரைப் படி தேவி மீண்டும் கடும் தவம் இருந்தாள்.கடைசியில் மஹாதேவன் மனமிரங்கி பிரத்யக்ஷமாகி .தேவியிடம்,என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்என்றாராம்
தேவி, எனக்கு உங்கள் தேகத்தின் பாதி வெண்டும். நான் உங்களில் பாதியாகிவிட்டால் உங்களை விட்டு பிரிய வேண்டி வராது. பிரியாவிட்டால் முன்னால் செய்தது போல் சிறுபிள்ளைத்தனமான தவறுகள் நிகழாதல்லவாஎன்றாள். மஹாதேவனும் அப்படியே ஆகட்டும் என்றார்.
அன்று முதல் பரமேசுவரன் அர்த்த நாரீசுவரனானார். என்று பகவான் கதையை முடித்தார்.
இந்த கதையின் மூலம் பகவான் நமக்கெல்லாம் ஈசுவரனின்/ தாயுள்ளத்தின் கருணையும் இசுவரனில் லயித்து விட்டால் தவறுகள் நிகழாது என்றும் அறிவுறுத்துகிறார் போலும்

அப்படிப்பட்ட உலக மாதா தன் குழந்தைகளுக்கு கேட்காமலேயே படியளக்கிறாள்.
பகவான் வேண்டுகிறார்,  அதே போல் எனக்கு நீ அருள வேண்டும்  என்று.
பகவானின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் குறிப்பிடுவது தவறாகாது .
ஆசிரமத்திலேயே. வளர்ந்த ஒரு காளை மாட்டை மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு காணிக்கையாக அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அதற்கு பசவன் என்று பெயரிட்டார்கள்.
அந்த மாட்டை நன்றாக அலங்கரித்து ஆசிரமத்திலிருந்து அழைத்து சென்ற சாம்பசிவ ஐய்யருடன் போட்டோ எடுத்து ,அந்த போட்டோவையும் ,பழைய காலத்து ஜரிகை சால்வை விபூதி,குங்குமம்,மஞ்சள்,முதலான பிரசாதங்களையும் சாம்பவசிவ ஐய்யரிடமெ கொடுத்து அனுப்பினார்களாம்.
ஐய்யர் ஒரு பெரிய தாம்பாளத்தில் பிரசாதங்களையும் சால்வையும் வைத்து பிராமணர்கள் ந கர்மண ந ப்ரஜய தனேன என்று மந்திரம் ஓத பகவானிடம் சமர்ப்பித்தார்.
சாம்பசிவ ஐய்யர் சால்வையை எடுத்து பகவானின் கால்கள் மீது போர்த்தினார். விபூதியையும் குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு சால்வையை காலிலிருந்து அகற்றிவிட்டுக் கூறினார். பார்த்தீர்களா,அம்மா மீனாக்ஷி அனுப்பியிருக்கிறாள். அம்மா பிரசாதம்.
அங்கிருந்தவர்கள் அப்பொழுது அவர் குரல் தழுதழுத்ததையும் உடம்பு சிலிர்த்ததையும் கண்டார்களாம்.
பகவான் ஆனந்த பாஷ்பம் நிறைந்த கண்களை மூடிக்கொண்டு மௌனமாகி சிலை போல் அசலமாக அமர்ந்துவிட்டாராம்.
அருணாசலராயிருந்தாலும் தேவி மீனாக்ஷியாயிருந்தாலும் ஒன்றே என்று பகவான் கருதினார் என்பதற்கான சான்று இது..

மற்றொரு விளக்கம் ஔவை பிராட்டிக்கு பகவான் கணேசர் ஆசியளித்தது போல் எனக்கும் அருள வேண்டும் என்று பகவான் கேட்டுக்கொள்கிறார் என்பதாகும். எல்லா கடவுள்களும் ஒன்று தான் என்ற பகவானின் ஞானம் இதன் மூலம் வெளியாகிறது.

ரமணஜோதி 16

புலன்களின் விளையாட்டு
ஐம்புலக் கள்வரகத்தினிற் புகும்போ
தகத்திநீ யிலையோ வருணாசலா

ஓருவனா முன்னை யொளித்தெவர் வருவா
ருன்சூ தேயிது வருணாசலா

ஆன்மானுபூதி ஏற்படாவிட்டால் –ஜீவன்மா பரமாத்மாவுடன் லயீகவில்லை யென்றால்-மனம் இந்திரியங்களின் ஆளுகைக்கு உட்பட்டுவிடும்.
சாதாரண ஜீவான்மாவின் சந்தேகம் “ஏன் இப்படி நிகழ்கிறது?” என்பது தான்.
பரமாத்மா சர்வ சக்தனாயிருப்பதால் அவன் ஏன் நம்மை வலிய ஆட்க்கொண்டு இந்திரியங்களிடமிருந்து விடுதலை தரலாகாது?
பரமாத்மா தூக்கத்திலிருக்கிறாராஇல்லை;வேண்டுமென்றே சோதனை செய்கிறாராஅல்லது அவருடைய லீலையோ இது?
இப்படிப்பட்ட சந்தேகங்களை பகவான் நம் சார்பில் கேட்கிறார்.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ
                             வ்யவஸ்திதௌ
தயோர்ந வசமாக்ச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ

மூன்று வகையான –தமோ,ரஜோ,சத்துவ- குண வித்தியாசங்களால் இந்த பிரபஞ்சம் உண்டாகியுள்ளது. அதே போல் ஐந்து இந்திரியங்களிடையேயுள்ள விருப்பு வெறுப்புக் களால் உயிர்களின் இயல்புகளிலும் வேறுபாடு உண்டாகிறது
இந்த விருப்பு வெறுப்புகளை மாற்றியமைப்பதில்த் தான் ஜீவான்மாவின் வெற்றியடங்கியிருக்கிறது.
அந்த இந்திரியங்களால் ஏற்படுகின்ற விருப்பு வெறுப்புக்கள் தான் நமது சத்ருக்கள்.

இந்த காம-குரோத சத்ருக்களை சம்ஹாரம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்கிறார். ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்.
இந்த காம குரோதங்கள் உலக விஷயங்கள் பற்றியதாக இருக்கும் வரை அது மிகவும் கஷ்டமே.
ஆகவே அந்த ஈர்ப்பை நாம் ஈசுவரினிடம் திருப்பி விட வேண்டும்.
உலக விஷயங்களிலுள்ள ஆசையை ஈசுவரனிடத்து பற்றாக மாற்ற வேண்டும்,
மற்ற ஜீவாத்மாக்களிடம் ஏற்படுகின்ற கோப தாபங்களை ஈசனை நோக்கித் திருப்பி விட வேண்டும்.
ஏன் அந்த பரமாத்மா இவ்வாறு ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
அப்பொழுது நமக்கு புரியும் நாம்- ‘ஈசனை மறந்தோம் .அவனை நினைப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகத் தான் ஈசன் இதை உருவாக்கியுள்ளான்



பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவதை மீண்டும்  பார்ப்போம்:

மயி ஸர்வாணி கர்மாணி ஸ்ம்ன்யஸ்யாத்யாத்மசேதஸா!
நிராசீர்னிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர!

எல்லாம் ஈசன் செயல். எல்லாம் அவன் உடமைநாமெல்லாம் அவனின் அம்சங்கள்;இந்த எண்ணங்கள் வரும்பொழுது நாம் இந்தியிரியத் தாக்கத்திலிருந்து விடுபட்டு விடுவோம்.
கீதையின் இரண்டாம் அத்தியாயம் 62-ஆம் சுலோகத்திலும் மூன்றாம் அத்தியாயம் 34-ஆம் சுலோகத்திலும்சொன்னதை கிருஷ்ண பரமத்மா மூன்றாம் அத்தியாயம் 37-ஆம் சுலோகத்தில் மறுபடியும் வலியுறுதுகிறார்.

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண்ஸமுத்பவ:  !
மஹாசனோ ம்ஹாபாப்மா வித்த்யேன்மிஹ வைரிணம். !

ரஜோகுணத்திலிருந்து உதிக்கின்ற காமமும் குரோதமும் தான் நமக்கு சத்ருக்கள். அவை நம்மில் உண்டகும்போது ரஜொ குணம் மேலும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது.
இந்த காம குரோதங்கள் தீனி கொடுக்க கொடுக்க அடங்குவதில்லை;நேர்மாறாக மேலும் மேலும் வளருகிறது

இந்திரியாணி மனோபுத்திரஸ்யாதிஷ்டான்முச்யதே !
ஏதைர்விமோ ஹயத்யேஷ ஞானமாவ்ருத்ய தேஹினம் !

காம குரோதங்களுடைய பிறப்பிடமும் இருப்பிடமும் இந்திரியங்களால் ஊக்கிவிக்கப்படுகின்ற மனதும் புத்தியும் தான்.. எங்கிருந்து சத்ரு இயங்குகிறான் என்று தெரிந்து விட்டால் அவைகளை அழிப்பது சுலபம். மனதை அழிக்க வேண்டும் என்று பொருள்.

தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப !
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் ஞானவிக்ஞானநாசனம். !

நாம் இந்திரியங்களை அடக்க பயின்றுவிட்டோமென்றால்
ஆசைகள் தானாகவே அழிந்து விடும்.ஆத்ம சொரூபத்தை மறைக்கின்ற ஆசை அழிந்து விட்டால் பிரமனிடம் லயிப்பது எளிதாகி விடும்.

இதையே தான் பகவான் ரமணர் உபதேச உந்தியாரில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

பாவ பலத்தினாற் பாவனா தீதசற்
பாவத் திருதலே யுந்தீபற
பரபத்தி தத்துவ முந்தீபற
          உ.உ.9
நமது தியானம் கடவுளை நம்மிலிருந்து அன்னியமான ஒன்றாகக் கருதி இருக்குமேயானால்,நம் மனது பல திசைகளில் சிதறிப் போக வாய்ப்புண்டு..
கடவுள் நம்மிலிருந்து அன்னியமான ஒன்று இல்லை கடவுள் என்பது நம்முள்ளே இருக்கும் ஆத்மா தான் என்று திண்ணமாக நம்பி தியனம் செய்வோமேயானால்நம் மனம் சுத்தம் செய்ய்யப்படும்.
இதுதான் “அனன்ய பாவம்
அனன்ய பாவமாகப்பட்டது நமது மனதை ஒருமுகப்படுத்தி நமது கவனம் வேறு எங்கும் செல்லாமல் இருக்க உதவுகிறது.
இந்த “சத்-பாவம்”  நமது பாவனா சக்தியை மீறின அனன்ய பாவமாகும். இது பர பக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டதாகும்.
மற்றொரு விதத்தில் கூறினால்,பக்தி மார்க்கம் முதலிய நிஷ்காமிய கர்மங்கள்  நம்மை ஈசனிடம் எடுத்து செல்லுமென்றாலும் அவை அதற்கான முதல் படியேயாகும்.
முடிவு விசார விகாரமில்லாத அகர்ம அவஸ்தையே ஆகும்.அந்த நிலையில் நாமும் பிரம்மமும் ஒன்று தான் என்ற ஆத்மானுபூதி ஏற்படும்.அதற்கு “நான் யார்” என்ற விசார மார்க்கமே ஒரே வழி.
நாம் நமது உண்மையான சொரூபத்தில் லயிக்கும்போதுஜீவாத்மாவும் பரமாத்மவும் ஒன்று தான் என்ற விவேகம் வரும் போது  நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று அடையும் போது,நமது அஹம் அழியும்.நமக்கு நிரந்தரமான ஆன்மானுபூதி ஏற்படும்.
இதைத்தான் பகவான் ரமணர் உபதேச உந்தியார் 10-வது சுலோகத்தில் கூறுகிறார்.
உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற

இதையேதான் தாண்டவராயன் பிள்ளை கைவல்ய நவனீதத்திலும் சொல்கிறார்.

எவருடை யருளால் யானே யெங்குமாம் பிரம மென்பால்
கவருடைப் புவனமெல்லாங் கற்பித மென்ற் றிந்து
சுவரிடை வெளிபோல் யானென் சொரூபசு பாவ மானே
னவருடைப் பதும பாத மநுதினம் பணிகின்றேனே
                   கை.ந நீ-கடவுள் வணக்கம்

ஓம்  எனும்  பிரணவம்

ஓங்காரப் பொருள் ஒப்புயர் வில்லோய்
உனையார் அறிவார் அருணாசலா

ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு மேலான ஒன்று இல்லை என்பது வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய உண்மை.
ஓம் என்பது ” ‘’ “ம் என்கின்ற மூன்று எழுத்துக்களின் கூட்டால் உருவான ஒன்று.
அ முதலெழுத்து.
ம் என்பது கடைசி எழுத்து.
இவை இரண்டையும் சேர்த்து வைக்கிறது உ
 என்று சொல்கின்ற போது நம் உதடுகள் பிரிகின்றன.
ம் சொல்லி முடிக்கும்போது நம் உதடுகள் இணைகின்றன. அதற்குப் பின் வேறு ஒலி இல்லை.
ஓம் என்பது தான் எல்லா ஒலிகளுக்கும் மூலம். அதுவே முடிவும்.
இந்த ஓங்கரத்திலிருந்து தான் உலகமே பிறந்தது என்று கூறலாம்.
இன்னொரு விதத்தில் பார்த்தால்  என்றால் பிரமம்” “ம் என்பது மாயை.பிரமனையும் மாயையும் இணைப்பது .
ஓம் தத்துவமஸி என்ற தத்துவத்தை குறிக்கிறது.
 ஜீவாத்மாவை குறிக்கிறது.
காரம் பரமாத்மாவைக் குறிக்கிறது.
 காரம் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து ஆத்ம சாக்ஷாத்காரம் உளவாக்கிறது.
இவைகளைத் தவிர வேறு பல முக்கியத்துவங்களும் ஓங்காரத்திற்குள்ளது.
” “” “ம் என்ற மூன்றெழுத்து கீழ்கண்ட பல முப்பெரும் சக்திகளின் ஒருங்கிணைப்பை உணர்த்துகிறது:
*      பிரம்மா-விஷ்ணு-சிவன்
*      நடந்தவை-நடப்பவை-நடக்க இருப்பவை
*      பிரகிருதி-ஜீவாத்மா-பரமாத்மா
*      விஸ்வம்-தைஜசம்-பிரக்ஞ்சை
*      விராட்-ஹிரண்யகர்ப-ஈஸ்வர
*      ஸத்வ-ரஜஸ்-தமஸ்
*      பிறப்பு-வாழ்க்கை-இறப்பு
*      சிருஷ்டி-பரிபாலனம்-சம்ஹாரம்
*      ஜாக்ரத்-ஸ்வப்ன-ஸுஷுப்தி

உபனிஷத்துக்களில் ஓம்
உபனிஷத்துக்களில் பிரணவ மந்திரமான ஓம்’ வில்லுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் வில்லல்ல;அம்பு தொடுக்கப்பட்ட வில். ஜீவாத்மா என்ற அம்பை பரமாத்மா என்ற குறியீட்டை நோக்கி இயக்கபடவுள்ள வில்.

எப்பொழுது ஒரு யோகி தனது இந்திரியங்களை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாரோ-எவரொருவர் யமா ,நியமா,ஆசனா,பிராணாயாமா,ப்ரத்யாஹாரா,தாரணா முதலிய நிஷ்டைகளின் மூலம் தன்னடக்கத்தை கண்டு விட்டாரோ அவர் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் மூலம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அவர் நிர்விகல்ப ஸமாதி நிலையை அடைந்து விடுகிறார்..இதைத்தான் கைவல்ய முக்திஎன்று கூறுகிறார்கள்.
ஓம் என்ற பிரணவ மந்திரத்தை மூன்றரை மாத்திரை நேரம் உச்சரிக்க வேண்டும்.
ஒரு மாத்திரை என்பது கண் சிமிட்டும் நேரமே.
அல்லது நாம் உறங்கும் போது ஒரு முறை மூச்சை இழுது விடுவதற்கான் நேரம்.
இந்த மந்திரத்தை சொல்லும்போது  நமது நாபியிலிருந்து கிளம்பி மெதுவாக நம் உச்சந்தலையிலுள்ளபிரம்மரந்த்ர என்ற ஸ்தானத்தை அடையும் போது உலக சிந்தனைகள் நம்மை விட்டு நீங்கிவிடும்.

ஈசாவாஸ்ய உபனிஷத்தில் ஸோஹம் ஜபத்தை குறித்து விவரணம் வருகிறது.
ஸோஹம் என்றால் ஸ-அஹம்.
ஸ வடமொழியில் அவன் என்பதை குறிக்கிறது.
அஹம் என்றால் நான்.
ஆகவே ஸோஹம் என்றால் அவனே நான்-நானே பிரம்மம்-அஹம் பிரம்மாஸ்மி.
ஸோஹம் என்பது ஓங்கார மந்திரத்தின் இன்னொரு பதிப்பு தான்.
அது ஜீவாத்மா-பரமாத்மா ஐக்கியத்தை குறிக்கிறது

அப்படிப்பட்ட ஓங்காரத்தை விட உயர்ந்தவன் நீ, அருணாசலா என்கிறார் பகவான் ரமணர்.

கடவுளை பலர் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.
எல்லா பெயர்களையும் விட மிகப் பொருத்தமான பெயர் ஓம் என்கின்ற பிரணவம் தான் என்று யோக ஸுத்ரம் சொல்கிறது.

மாண்டூக்ய உபனிஷத் கூறுகிறது-ஓம் என்றால் எதுவாக இருந்ததோ,ஏதுவாக இருக்கிறதோ, எதுவாக இருக்குமோ அது தான் ஓம்.அதற்கு கால தேச வரையறை கிடையாது.
ஆகவே ஓம் பெயரில்லாத ஒரு பெயர். ஒரு விதத்தில் பார்த்தால் அது ஒரு பெயர்.இன்னொரு விதத்தில் பார்த்தால் அது பெயரே இல்லை.
பெயரிட முடியாத பிரகிருதி-இயற்கை.
நம்மால் கால தேச பரிமிதிகளுக்கு உட்பட்ட நம்மால்- அப்படி ஒரு சக்தியை கற்பனை பண்ணிக் கூட பார்க்கமுடியாததால் நம் மனோதர்மத்திர்கு தகுந்த படி அதற்கு பெயர் சூட்டுகிறோம்.
ஆகவே தான் லிங்கம் அதற்குப் பொருத்தமான பெயர்.
லிங்கத்திற்கு பெயர் சூட்டமுடியாது.
அது ஒரு குறியீடு-சின்னம்.
ஆரம்பத்தில் நாம் பார்த்தது போல் லிங்கத்தின் தோற்றமே ஒரு அக்னிப் பிழம்பிலிருந்துதான்.
அதற்கு ஏது பெயர்? ஏது உருவம்.?
அதனால்த்தான் பகவான் கேட்கிறார்- அந்த ஓங்காரத்திற்கு இணை ஏது? இணையே இல்லாதபோது அதற்கு மேலானது எங்கிருந்து வரும்?
இதையேதான் அர்ஜுனன் கீதையில் பகவான் கிருஷ்ணனை பார்த்து கேட்கிறான்- உனக்கு ஈடானவர்கள் யாருமே இல்லை.அப்படி இருக்கும் போது உன்னைவிட மேலானவர்கள் எப்படி இருக்க முடியும்?
நம்மைப் போன்ற சாதாரண மனித மனத்தால் அந்த பிரம்மத்தை புரிந்து கொள்ளவும் முடியாது;தெரிந்து கொள்ளவும் முடியாது.
அது நம்மிலிருந்து வேறானால்த் தானே புரிந்து கொள்வதோ தெரிந்து கொள்வதோ என்கின்ற கேள்வி எழும்.
ஆகவே பகவான் ரமணர் நான் யார்  என்கின்ற விசார மார்க்கத்தின் மூலம் ஆத்மானுபூதி அடைந்து அந்த ஓங்கார பிரம்மத்தில் லயிக்க வேண்டும் என்கிறார்.