Monday 3 November 2014

ரமணஜோதி 9

ரமணஜோதி 9
நூல்
அருணா சலசிவ  அருணா சலசிவ
அருணா சலசிவ  அருணா சலசிவ
அருணா சலசிவ  அருணா சலசிவ
அருணா சலசிவ  அருணா சலசிவ

இந்த நாலடிகள் தான் அக்ஷர மணமாலையின் மூலமந்திரம். அருணாசலமே சிவன்; சிவனே அருணாசலம்  
அருணசலம் ஒரு காலத்தில் அக்னிப் பிழம்பாக இருந்ததாம்.
கிரிதா யுகத்தில் அருணாசலம் அக்னியாகவும் த்ரேதா யுகத்தில் வைரக் குவியலஆகவும் துவாபர யுகத்தில் தங்க மலையாகவும்,கலியுகத்தில் கல்லாகவும் காட்சியளிக்கிறது.என்றும் கூறுவார்கள்.

கிரிதா யுகத்தில்  பிரம்மாவும் திருமாலும் அருணாசலத்தின் அடியையும் முடியையும் தேடிப் போனார்களாம். கண்டுபிடிக்க முடியவில்லயாம். இது ஒரு ஐதீகம் அல்லது மக்களுடையே நிலவி வரும்  கதை.
இம்மாதிரியான கதைகளை ஆங்கிலத்தில் மித் (myth)  என்பார்கள். எல்ல மித்து (myth)க்களின் பின்னாலும் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கும். அந்த தத்துவத்தை விட்டு விட்டு கதையை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறோம்.
காளிதாசன் கூறினான்  நாம் உட்கர்ந்து கொன்டு இருக்கும் கிளையை வெட்டினால் நமக்கு மோக்ஷம்(சாவு) தான். நாம் உட்கார்ந்துகொன்டிருக்கின்ற கிளையை வெட்டினால் கீழே விழுந்து மரணம் அடைவோம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.இது கூட தெரியாத காளிதாசன் ஒருமுட்டாள் என்று மக்களுடையே பரவியுல்ல கதை. அதன் பின்னால் ஒரு மகத்தான தத்துவம் உள்ளது என்று பெரும்பாலோரின் கண்களுக்கு /அறிவுக்கு தெரிவதில்லை. நாம் இந்த உலகிலுள்ள பந்த்தங்களையெல்லாம் வெட்டி விட்டால்த் தான் முக்தி அல்லது மோக்ஷம் கிடைக்கும் என்ற அடிப்படை உண்மையை மறந்து விடுகிறோம்.
அதே போல் அருணாசலத்தின் அடி முடியை பிரமனாலும் திருமாலாலும் காணமுடியவில்லை என்பதும் ஒரு மித்தாக்த் (myth)தான் இருக்க வேண்டும்.
  பரமனான் பரமேஸ்வரனுக்கு அல்ல்து கிருஷ்ண பரமாத்மாவிற்கு அல்லது அந்த அந்தமில்லா பிரம்மத்திற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை என்பதே இதன் பொருளாக இருக்க வேண்டும்.
அருணாசலம் இன்றும் லிங்க வடிவிலேயே காணப்ப்டுகிறது.
பகவான் ரமணர் அருணாசலத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:
கருணார்வமாய்க் கருதக் கதி யருணாசலமிதாம்
அக்ஷர மணமாலை முழுக்க ஒவ்வொரு ஈரடிகளுக்கும் பிறகு இந்த மூல மந்திரத்தை சொல்வதன் மூலம் நாம் அந்தபிரம்மத்துடன் நெருங்கி செல்கிறோம்.
அஹம் ப்ரம்மாஸ்மி
அருணா  சலமென வகமே  நினைப்பவ
ரகத்தைவே ரறுப்பா யருணா சலா


இந்த முதல் ஈரடிகளில் பகவான் அகம்’,’அஹம் இரு வார்த்தைகளைக் கொண்டு ஒரு சொல் சிலம்பம் ஆடியுள்ளார்.
அகம் என்றால் மனம் /உள்ளே என்று அர்த்தம்
.அஹம் என்றால் ணான் எனும் அஹந்தை என்று பொருள்.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நாம் உள்ளத்தில் அருணாசலனை நினைத்துக் கொண்டிருந்தால் நம் அஹந்தை அழியும் என்று பொருள் கொள்ளலாம்.
சிறிது உள் புகுந்து யோசித்தால் வெளிப்படையான  நான் அல்லது மாய நான் எவ்வாறு உண்மையான் நானை உண்ர விடாமல் தடுக்கிறது என்றும் அதனால் நாம் இகபரமான இந்திரிய ஜனிதமான ஆசாபாசங்களால்,கோபதாபங்களால்,பொறாமை போட்டிகளால் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்ப் படுகிறோம்.
ஆகவே இந்த மாய நானை அழித்து உண்மையான பிரம்மத்துடன் ஐக்யமாக வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.
அதற்கு ஒரே வழி அருணாசலத்தை த்யானம் செய்து அவனுடன் ஒன்றாவதே.
இதைத் தான் பகவன் முதல் இரண்டு வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment