Tuesday 5 May 2015

ரமணஜோதி 108

ரமணஜோதி 108

மோகம் தவிர்


                                      மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
                                                மோகந்தீ ராயென் னருணாசலா

“ இகலோக வஸ்துக்களின் மீதுள்ள என் மோகத்தையெல்லாம் விட்டு விட்டு உன் மீது மட்டும் பற்று வைத்து, என் ஆசைகளையெல்லாம் நாசமடையச் செய்துவிடு, அருணாசலா.” என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
பௌதிக வஸ்துக்களின் மீதுள்ள மோகம் தான் நமது சகல விதமான துன்பங்களுக்கும் காரணம்.அந்த மோகத்திற்கோ ‘அகம்” எனும் போதம் தான் காரணம்.இந்த ‘அகம்காரமோ வாசனைகளால் மூடப்பட்ட சத் தமோ ரஜோ குணங்களின் உந்துதலால் உளவானவை. வாசனைகளையும் இந்திரிய   சுகங்களின் மீதுள்ள மோகத்தையும்  ஒழித்து விட்டால் நமது சித் சத் மாத்திரமாகிவிடும்.அப்படி ஆவதற்கு நமது சித்திற்கு ஒரு பிடிமானம் வேண்டியுள்ளது.அந்த பிடிமானம் தான் அருணாசலன் மீதுள்ள பக்தி அல்லது மோகம். அந்த மோகம் வந்து வந்து போகின்ற மோகமாக இருக்க்க் கூடாது. அது ஸ்தாயியான மோகமாகயிருக்க வேண்டும்.அதனால்த் தான் பகவான் ஜபதபங்களையும் தியானங்களையும் தாற்காலிகமான சாந்தி தரக்கூடியவை என்கிறார் .அவை நிரந்தர சாந்தியை தரா என்கிறார்.
.
          கவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
                        அனன்யாஸ்சிந்தயந்தோ மாம் யேஜனா:பர்யுபாசதே
                             தேஷாம் நித்யாபியுக்தானாம் யொகக்ஷேமம் வஹாம்யஹம்
                                                          [/கீ அத் 9 சுலோ 22
                             சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேஜம் சரண்அம்வ்ரஜ
                             அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:!
                                                          ப.கீ அத் 18 சுலோ 66  
இந்த இரு சுலோகங்களின் மூலம் பரமாத்மா நமக்கு சொல்வதென்னவென்றால்,யாரொருவன் என்னில் எல்லாவற்றையும் அர்பித்துவிட்டு என்னில் ஐக்கியமாகிறானோ,அதாவத் எவனொருவனுக்கு எந்தவொரு மோஹமுமில்லாமலுள்ளthO அவனுக்கு நான் கடன் பட்டவனாகிறேன். அந்தக் கடனை அவனுக்கு முக்தி அளிப்பதன் மூலம் தீர்க்கிறேன்.
சர்வ தர்ம பரித்யஜ்யஎன்ற  பதம் பலரால்பல விதமாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது இதன் அர்த்தம் எல்லா தர்மங்களையும் விட்டால் மட்டுமே முக்தி என்று பொருள் பட் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.
இதன் சரியான பொருள் கர்ம பலன்களில் மோஹம் இல்லாமல் எவனொருவன் கர்மங்களை இயற்றுகிறானோ அவனுக்கு முக்தி கிட்டும்;
பகவான் ரமணர் ,நீ அங்கேயே இரு” என்பார்.நீ இருந்த இடத்திலிர்ந்துகொண்டே உனது தர்மங்களையும் கர்மங்களையும் செய்துகொண்டே ஆத்மசாக்ஷாத்காரம் அடையமுடியும்.எந்த கர்மத்தையும் தியாகம் செய்யவேண்டாம்.கர்மத்தின் மீது—கர்ம பலத்தின் மீதுள்ள பற்றுதலை விட்டாலேபோதும்.அவ்வாறு பற்றற்ற கர்மங்களை இயற்றுபவன் ஆத்மா சாக்ஷாத்காரத்திற்கு தகுதியுடையவனாகிறான்.
இப்படிப்பட்ட மனோ நிலையை நாம் எப்படி அடைய முடியும்?.கர்ம பலங்களின் மீது பற்றின்மை உண்டாக வேண்டுமென்றால் ‘வைராக்கியம்’ உண்டாக வேண்டும்; ‘வைராக்கியம்’ உண்டாக வேண்டுமென்றால் ‘விவேகம்’ உண்டாக வேண்டும்.’விவேகம் எப்படி யுண்டாகும்? ‘கூர்மதி’ படைத்தவர்களுக்கு மட்டும் தான் விவேகம் கைக்கிட்டும்.’கூர்மதி ‘படைத்திருந்தால் மட்டும் போதாது; அதை பயன்படுத்தி நம் உள்ளமெனும் ஆழ்கடலுக்குள்   நுழைந்து ‘நான் யார்’ என்று தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்.
இந்த நித்யமான உண்மையை பகவான் ரமணர் தனது ‘உள்ளது நாற்பது’ நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள் காண வேண்டி---முழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சுமூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டு மறிபிணம்போற்---றீர்ந்துடலம் .
                        உ.நா சுலோ 28
விவேகம் என்றால் ‘நான்’ என்று ஒன்றில்லை;அல்லது எல்லாமே நான் தான். என்ற ஞானம் .அந்த ஞானம் பெற வேண்டுமென்றால் ‘நான்; எங்கிருந்து எழுகின்றது என்பதை அறிய வேண்டும்.நீரில் ஒரு பொருள் விழுந்து விட்டால் அதை கரையிலிருந்தவாறு தேடினால் கிடைக்காது.நீரினில் இறங்கி, மூழ்கி த் தேட வேண்டும். முத்துக்குளிப்பவர்கள் கடலினுள் மூழ்கி முத்துச் சிப்பியை கண்டெடுக்கிறார்கள்.நீரினுள் இறாங்கும்பொழுது மூச்சை அடக்கி ஏகாக்கிர சிந்தனையுடன் ஒரு முனைப்பாக  முத்துச் சிப்பியை தேட வேண்டும்,அதற்கான விவேகத்தை பகவான் ‘கூர்மதி’ எங்கிறார்.
இதே அர்த்தம் கீழ்க்கண்ட சுலோகத்திலும் காணலாம்:
                             காமியத்து அழுந்தி இளையாதே
                             காலர் கை படிந்து மடியாதே
காமிய கர்மங்களில் ஈடுபட்டால், வீணாக நம் சக்தியை விரயம் செய்தவர்களாகிறோம். காலனின் பாசத்தின் வலயத்தில் சிக்கி கொள்கிறோம்.இறப்பு-பிறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுதலை பெறமாட்டோம்.
இதே கருத்தை பகவான் திரும்பத் திரும்ப கூறுவார்,. உள்ளது நாற்பது 23 ஆம் சுலோகத்தில் கூறுவார்:
                             நானென்றித் தேக நவிலா துறக்கத்து
                             நானின்றென் றாரு நவில்வதில்லை—நானொன்
                             றெழுந்தபி னெல்லாமெழுமிந்த நானெங்
                             கெழுமென்று நுண்மதியா லெண்ண—நழுவும்
28வது சுலோகத்த்தில் கூர்மதி; இங்கு நுண்மதி.’’நான்; என்ற எண்ணம் உறக்கத்தில் தோன்றுவதில்லை; ஆகவே நமக்கு உறக்கத்தில் பிரச்சினையெதுவுமில்லை; விழித்தெழுந்து விட்டால் இந்த உடல் தான் ‘னான்’ என்ற எண்ணம் உண்டாகிறது..இதை தெரிந்து கொண்டு விட்டால்; ‘உடலும் நானும் ஒன்று என்ற எண்ணம் தான் எல்லபிரச்சினைகளுக்கும் காரணம் என்று புரிந்து கொண்டுவிட்டால்—அதற்கான நூண்மதி’ பெற்றுவிட்டோமென்றால் மோகங்கள் அஸ்தமித்து விடும்.அந்த மோகனனுடன் நாம் லயிப்பது எளிதாகிவிடும்.
இதையே திருமூலர் திருமந்திரமாக தருகிறார்:
                             போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி
                             தேற்றுமின் என்னும் சிவனடிக்கே செல்வம்
                             மாற்றியதென்று மௌஅலுற்ற சிந்தையை
                             மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே
                                                                                    எல்லா செல்வங்களும் பரமனால் சிருஷ்டிக்கப்பட்டவை.ஆகவே எல்லாவற்றையும் அவனுக்கு அர்ப்பணித்து விட்டு இகப்பொருள் மோகத்தை விட்டு விட்டு பரமன் மீது பற்று வையுங்கள். ஒரு மோகத்தை இன்னொரு மோகத்தால் தான் முறியடிக்க முடியும். பௌதிகபொருள்களின் மீதுள்ள மோகத்தை மாற்றி அரூணாசலன் மீது மோகம் வைத்தால் ஆத்மசாக்ஷாத்காரம் அடைய முடியும்.

                                                            

No comments:

Post a Comment