Friday, 19 December 2014

ரமணஜோதி 21


பக்தி  எனும் பூரண சரணாகதி


கிரியுருவாகிய கிருபாக் கடலே
கிருபை கூர்ந்தருள்வாய ருணாசலா

கிரி என்றால் மலை. மலை உயரத்தைக் குறிக்கிறது. கடல் ஆழத்தைக் குறிக்கிறது. அருணாசலம் அக்னிப் பிழம்பான மலை. அக்னிப் பிழம்பின் அடியும் தெரியாது;முடியும்(முடிவும்) தெரியாது. ஆதியும் கிடையாது; அந்தமும் கிடையாது.

அப்படிப்பட்ட=-ஆதியும் அந்தமும் இல்லாத அருணாசலா, எனக்கு (எங்களுக்கு) நீ அருள்வாயாக.,என்கிறார் பகவன் இந்த ஈரடிகளில்.
மலையையும் கடலையும் குறிப்பிட்டு உயரமும் ஆழ்கடலும் ஒன்று தான். பிரமனின் வெவ்வேறு விதமான வெளிப்பாடுகள் தான் என்று சொல்லாமல் சொல்லுகிறார் பகவான்
சாதாரண மனிதர்கள் கடவுளிடம் எனக்கு செல்வம் வேண்டும், கல்வி வேண்டும், மனைவி மக்கள் வேண்டும் என்றெல்லாம் வேண்டுவார்கள். பகவானோ அருணாசலத்தின் அருள் மட்டும் இருந்தால் போதும் என்கிறார்.
துருவ ராஜகுமரன் கடுந்தவத்திற்குப் பின் மஹாவிஷ்ணு பிரத்தியக்ஷமான போது தான் எதற்காக தவம் இருந்தானோ அதை மறந்து உன் அருள் வேண்டும் என்றானாம். அது தான் சுத்த பக்தி
இதையே தான் கீதையில் பன்னீரெண்டாம் அத்தியாயத்தில் இரண்டாவது சுலோகத்தில் சொல்லுகிறார்.

:மய்யாவேச்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாசதே !
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: !!

என்னிடத்தில் யாரொருவன் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஏகாக்கிரதையுடன் ஒருமனதாகி என்னை உபாசிக்கிறானோ அவன் தான் சிறந்த யோகி.

நிர்குணோபாசனையோ  சகுணோபாசனையோ எதுவாக இருந்தாலும் விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுக்க கூடாது. நமது மார்க்கமே சரியான மார்க்கம் மற்றெல்லாம் தவறானது என்ற எண்ணம் கூடாது. இதை விளக்குவதற்காகத்தான் கீதையில் கர்ம யோகம்,பக்தி யோகம் ஞான யோகம் என்று எல்லா மார்க்கங்களையும் விவரித்து கூறியிருக்கிறார் பகவான் கிருஷ்ணர்.
உண்மையான பக்தி உண்டாகிவிட்டால் இக லோக சம்பந்தமான ஆசைகள் மட்டுமல்ல, பரலோகத்தை குறித்துள்ள இச்சைகள் கூட இருக்க கூடாது.
பக்தி என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை பஜ் என்ற மூலத்திலிருந்த்து வந்துள்ளது. பஜனை,அனுராகம்,பிரேமை,பிரீதி எல்லாமே பக்தியைத்தான் குறிக்கிறது.
உண்மையான பக்தன் கடவுளை கடவுளுக்காகவே வேண்டுகிறான்.
அந்த பக்தியில் சுய லாபம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
பயத்திற்கும் இடமில்லை.
தனையன் தந்தையைக் கண்டு -தந்தை எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும்- பயப்படுவதில்லை.
கடவுளிடம் வைக்கபடுகின்ற அன்பில் சுயநலம் என்பது கொஞ்சமும் இருக்காது.
கடவுளைக் காணவேண்டும் முக்தி கிடைக்க வேண்டும் என்று கூட வேண்டுவது கூடாது.
பிரஹலாதன் சிறுவனாயிருக்கும் போது அவனது தந்தையால் கடுமையான சோதனைக்குள்ளாக்கப் பட்ட போதும் கடவுளை நிந்திக்கவுமில்லை,கடவுளை தன் துணைக்கு அழைக்கவும் இல்லை. ஒவ்வொரு முறை சோதனைக்குள்ளாக்கப் பட்டபோதும் அவன் நாம் கடவுளை நெருங்கி விட்டோம் என்று தான் நினைத்தான்.
கடவுளோடு லயித்து விட வேண்டும் என்பது மட்டும் தான் அவனது குறிக்கோளாக இருந்தது
ஒரு முறை ஒரு பக்தர் பகவனிடம் ஒரு கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதிக் கேட்டார்:
பகவானிடம் அனன்ய சரணாகதி அடைந்தால் எல்லாம் கிடைக்குமென்கிறார்களே, அனன்ய சரணாகதி என்றாலொரேயிடத்தில் அமர்ந்து ஒரு வித சிந்தனையுமின்றி, சரீர போஷணைக்கு அவசியமாண,ஆஹாராதி சிந்தனைகளை விட்டு விட்டு எப்போதும் பகவானை நினைப்பது தானா?
ஏதேனும் வியாதி வந்தால் கூட சிகித்சை பெறவும் முயலாமல் தேக நலன் நலனின்மை இவற்றையெல்லாம் ஈசன் கையில், என்று பகவானிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானா?
கீதையில் ஸ்தித பிரக்ஞயை பற்றி இப்படி கூறப்பட்டுள்ளதே?

விஹாயகாமான் யஸ்ஸார்வான் புமாம் ஸ்சரதி நிஸ்ப்ருஹ்ஃ
நிர்மமோ நிரஹங்காரஃ ஸசாந்திம் அதிகச்சதி
              அத்தியாயம் 2-71
(ஆசைகளையெல்லாம் அறுத்து,அபிமானமும் அஹங்காரமுமின்றி உலவும் மனிதனெவனோ அவன் அமைதி பெறுகிறான்.)
இந்த சந்தேகங்கள் நம் எல்லோர் மனதிலும் எழக் கூடியது தான்.
இதற்கு பகவான் ரமணர் அளித்த பதில் நாமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இந்த கேள்விகளை படித்துவிட்டு பகவான் நிதானமாக புன்னகையுடன் கூறினார்.
அனன்ய சரணாகதியென்றால், எவ்விதமான எண்ணத்திலும் பற்றில்லாமலிருப்பது என்பது உண்மை தான். ஆனால்
சரீர போஷணைக்கு வேண்டிய ஆஹாரம், ஜலம், முதலியவற்றிற்கான முயற்சியையும் விட்டு விட வேண்டியது தானா?
என்றால் என்ன சொல்வது?
பகவான் அனுக்கிரகத்தினால் தானாக வந்ததைச் சாப்பிட வேண்டுமா? அல்லது கொஞ்சம் முயல வேண்டுமா?என்று கேட்டிருக்கிறாரா?
முயற்சி இல்லாமல் தானாக வந்தாலும் கூட சாப்பிடுவது யார்?யாராவது வாயிலே போட்டாலுமே விழுங்கவாவது செய்யணுமா இல்லையா? அது மட்டும் முயற்சியில்லையா?
நோய் வந்தால் சிகித்சை எடுத்துக் கொள்ளவேண்டுமா அல்லது நம் தேகஸ்திதியை பகவானிடம் ஒப்படைத்து விட்டுச் சும்மா இருக்க வேண்டுமா? என்று கேட்கிறார்.
சங்கரர் சாதன பஞ்சகத்தில் சொல்கிறார்--

க்ஷூத்வ்யாதிஸ்ச்ச சிகித்ஸ்யதாம்
பிரதிதினம் பிக்ஷஔஷதம் புஜ்யதாம்

க்ஷூத் என்றால் பசி, பசியும் ஒரு வ்யாதி தான்.அந்த வ்யாதிக்கு மருந்து ஆஹாரம் தான்.

பிக்ஷைக்காவது போகணுமில்லையா? எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் உட்கார்ந்துகொண்டு, வந்தால் சாப்பிடுகிறேனென்றால், உலகம் நடப்பது எப்படி?
ஆகையினாலே, அவரவர்களின் சமஸ்காரங்களுக்குஏற்பப் பிரப்தமானதை அனுபவித்துக் கொண்டு ,செய்பவன் நான்’ என்ற கர்த்ருத்வ’ பாவமில்லாமல் இருக்க வேண்டும்.
செய்பவன் நான் என்ற எண்ணம் தான் பந்தம்.  அந்த பந்தமில்லாமலிருக்கும் வழியை  ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டுமே தவிர ,பசிக்கு ஆஹாரம் சாப்பிடலாமா,வியாதி வந்தால் மருந்து கொடுக்கலாமா என்று சந்தேகங்களை வைத்துக் கொண்டிருந்தால்,அவை முடிவில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும்.
அப்புறம் வலி வந்தால் முனகலாமா?மூச்சை உள்ளே இழுக்கலாமா? என்றெல்லாம் கூட சந்தேகங்கள் வரும்.
அனன்ய சரணாகதி செய்ய்ய வேண்டும் என்றால் மற்ற சிந்தனைகளையெல்லாம் விட்டு விட்டு மனத்தை கடவுளிடம் லயிப்பிக்க  வேண்டும்.

அப்படி ஒரு நிலைமையை அடைவதற்கு அருணாசலா நீ அருள வேண்டும் என்று நம் சார்பில் கேட்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.

ரமணஜோதி 20



சுபா சொரூப லக்ஷணம்.


காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற்

 கலந்தெனோ டிருப்பா யருணாசலா


காந்தம் ஒரே இடத்திலிருந்து கொண்டு இரும்புதுகள்களை தன்னிடம் ஈர்த்து ஒட்டிவைத்துக்கொள்ளூம்.  ஒட்டிக்கொண்டால் காற்றடித்தாலும் மழை பெய்தாலும் இரும்புத்  துகள்கள் காந்த்ததை விட்டுப் போகாது. காந்தத்தின் மற்றும் இரும்பு துகளின் சுபாவ சொரூப லக்ஷணம்.
இந்தக் கருத்தை சிவானந்த லஹரியில் ஆதி சங்கரர் கீழ்கண்ட சுலொகத்தில் விவரமாக கூறியுள்ளார்.

அங்கோலம   நிஜ பீஜ ஸந்ததிர்- அயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ நைஜ விபும் லத கிதி-ருஹம் ஸிந்துஹ்-ஸரித்-வல்லபம்
ப்ராப்னோதீஹ யதா ததா பூபதேஃ பாதாரவிந்த- த்வயம்
சேதோவ்றூத்திர்-உபத்ய தி டதி ஸதா ஸா பக்திர்-இதி உச்யதே

அங்கோல மரத்தின் விதைகள் எப்படி கீழே விழாமல் மரத்தின் உடலிலும் வேருகளிலும் ஒட்டிபிடித்துக்கொண்டு மீண்டும் முளைத்து வருகிறதோ, ஊசி எப்படி காந்தத்தினால் ஈர்க்கப்பட்டு,அதனிடம் சென்று ஒட்டிக்கொள்கிறதோ, எப்படி பதி விரதையான மனைவி கணவனையே சதா சர்வகாலமும் நினைத்துகொண்டிருக்கிறாளோ, எப்படி நதி நீரானது எங்கெல்லாம் சென்றாலும் கடைசியில் கடலைச் சென்று அடைகின்றதோ அது போல் ஜீவாத்மாவும் பரமாத்மாவை சென்று அடைந்து விட்டால் திரும்ப வராது.

அங்கோல மரம் என்பது 2500 வருடங்கள் பழமையான மரம்.
இதை எழுச்சில் என்று தமிழில் கூறுவார்கள்.
இந்த மரத்தை காணவேண்டுமென்றால் சின்னக் காவாணம் என்ற ஊருக்குச் சென்றால் அங்குள்ள சிவன் கோவிலில் காணலாம்..இந்த கோவிலின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் 108 கண்பதி உருவங்கள் சேர்ந்து உருவானது இங்குள்ளா சிவ லிங்கம்.. அப்பனும் மகனும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்குவதற்கோ என்னமோ லிங்கம் அப்படி அமைந்துள்ளது.
சின்னக் காவணம் சென்னையை அடுத்து 9 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இந்தக் கோவிலின் ஸ்தல விருக்ஷம் அங்கோலம்.
சஹஜ சுபாவ லக்ஷணம் என்பது நமது இயற்கையான சுபாவத்தை குறிக்கும்.
கடல் நீர் சூரிய வெப்பத்தினால் ஆவியாகி மேகமாகி காற்றினால் உந்தப்பட்டு மழையாகி பூமியை வந்தடைந்து நதியாகி கடலிலேயே சென்றடைகிறது.
அது போல் ஜிவாத்மாவும் எத்துணை பிறைவி எடுத்தாலும் கடைசியில் பரமாத்மாவை சென்றடைய வேண்டியது தான் இயற்கை.
இதைத்தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தின் மூலம் அறிவுறுத்துகிறார்.

ரமணஜோதி 19

ரமணஜோதி 19


அகக்கண் திறக்கட்டும்

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணூனைக்
                             காணுவ தெவர்பா ரருணாசலா

நாம் நமக்கு வெளியிலுள்ள வஸ்த்துக்களை காண்பது நமது கண்களால் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை.
பகவான் ரமணர் இந்த ஸ்தூல கண்ணுக்கு கண்ணாயிருப்பதைக் குறித்து கூறுகிறார் இந்த சுலோகத்தில்.
நமது ஸ்தூல சரீரத்தில் இருக்கின்ற அங்கங்களில் மிகவும் முக்கியமானது கண்கள் தான். கண்களில்லையென்றால் நாம் இந்த உலகத்தை காண்முடியாது
.ஒளி இருந்தால்த் தான் பொருள்கள் நம் கண்களுக்குத் தெரியும். ஒளியிருந்தாலும் கண்கள் இல்லாவிட்டால் பொருள்கள் நமக்கு தென்படமாட்டா.
ஆனால் இந்த கண்களை இயக்குவது எது?
அது தான் நமது மனம்.
கண்கள் திறந்திருந்தாலும்,நமது மனம் காண்பவையில் லயிக்காவிட்டால் கண் முன்னால் உள்ள பொருட்கள் நமக்கு தென்பட மாட்டா. மனம் காணுகின்ற கட்சிகள் தான் நமக்குத் தெரியும்
 நாம் கண் இருந்தும் குருடர்களாவோம்.
நாம் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் நிறைய காட்சிகள் நம் முன்னே ஓடிக்கொண்டேயிருக்கும்..
அது எப்படி?
நமது மனம் அதன் ஸ்ருஷ்டி சக்தியால்(கிரியா சக்தியால்) கண்களையும் மற்ற இந்திரிய உறுப்புக்களையும் கற்பனையில் உருவாக்கி நமக்கு காண்பதற்கான கேட்பதற்கான,வாசனையை கிரஹிக்கக் கூடிய சக்தியை அளிக்கிறது.
ஆனால் இந்த மனமும் செயல் இழந்திருக்கும் பொழுது- அதாவது உறக்கத்தில்- சொப்னாவஸ்தையில் நாம் பல காட்சிகளைக் காண்கிறோம், ஒலிகளை கேட்கிறோம். அதற்கான ஊக்க சக்தியை அளிப்பது / உருவாக்குவது நான்என்ற ஆன்மா தான்.. உறக்கத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதும் விழிப்பில் (ஜாக்ரத்) அவஸ்தயில் இருப்பதை மறைப்பதும் இந்த ஆன்மாவே தான்.
உறங்காத கண்களாம் இந்த ஆன்மாவை பகவான்,உள்ளது நாற்பது என்கின்ற நூலில் அந்தமிலாக் கண் என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஆன்மா தான் நான். அந்த நான் தான் கடவுள்; பிரம்மம்
நம் கண்களுக்கு காணும் சக்தி வேண்டும் என்றால் அந்த பிரம்மதின்/ கடவுளின்  உதவி வேண்டும்; ஆனால் பிரம்மத்திற்கு காண்பதற்கு யார் உதவியும் தேவை இல்லை.
இந்த ஆன்மா,அல்லது கடவுள் அல்லது பிரம்மம் என்பது ஒரு ஸ்தூல மல்ல. அது ஒரு அனுபவம்; ஒரு அனுபூதி.
அதை அனுபவித்துத் தான் உணர வேண்டும். அதை உணர வேண்டுமென்றால் நாம் பக்குவப் பட வேண்டும்
இப்படிப்பட்ட பக்குவம் எளிதாக்க் கிடைக்காது.. பகவான் ரமணர் அப்படிப்பட்ட ஒரு ஞானத்தை/ ஆத்மானுபூதியை சிறுவயதிலேயே அடைந்துவிட்டார்.

எது ஒன்று எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக இருக்கிறதோ,அதுவே தான் அதன் விளைவாகவும் இருக்கிறது..
அந்த பிரம்மனைப் பார்க்கமுடியுமா?
உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெரியும் அந்த உண்மை சொரூபத்தைப் பார்க்கவும் வேண்டுமோ?
அதனிலிருந்து உண்டாகும் மற்றெல்லா வஸ்துக்களும் வெறும் பெயர்களே.
இவ்விஷயத்தில் நமது உபனிஷத்துக்களும் மற்ற வேத கிரந்தங்களும் பிரம்மத்திற்கு ஐந்து கோணங்களுண்டு என்று கூறுகின்றன. சத்- சித்-ஆனந்த- நாம- ரூப.
இதில் முதல் மூன்றும் சத்யமானவை. கடைசி இரண்டும் மாயை-இருப்பது போல் தோற்றமளிக்ககூடியவை.
இந்த சந்தர்ப்பத்தில் ரமணர் கூறின ஒரு கதையை நினைவு கூறுவது தவறகாது.
மனிதன் ஞானம் பெறுவதற்கு பல விதமான பிரதிபந்தங்கள் உள்ள்ன .இவைகளைப் பற்றி விளக்கிக் கூறுமாறு ஒரு பக்தர் பகவானிடம் கேட்டதற்கு இணங்கி பகவான் கீழ்கண்ட கதையைக் கூறினார்.
பிரதிபந்தங்கள் பல விதமனவை
...அவைகளைத் தான் பூத-பவிஷ்யத்-வர்தமான ( இறந்தகால, எதிர்கால, நிகழ்கால) பிரதிபந்தங்கள் என்பார்கள். அந்த மூன்றில் பூத பிரதிபந்தத்திற்கு உதாரணமாக உபனிஷத்திலும், வாசுதேவ மனனத்திலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
பெரிய குடும்பியான ஒரு பிராமணன் ஜீவனத்திற்காக ஒரு எருமையை வளர்த்தான். அது கொடுக்கும் பால்,தயிர், நெய் முதலானவற்றை விற்று குடும்பத்தை பராமரித்து வந்தான். எருமைத் தீனிக்காக பசும்புல், பருத்திக்கொட்டை, முதலியவை சேகரிப்பதிலும், எருமையை கவனிப்பதிலும் குறியாக இருந்தான். கர்ம வசத்தினால் அவனுடைய மனைவி, குழந்தைகள் எல்லோரும் வரிசையாக சிறிது காலத்திற்குள்ளேயே இறந்தார்கள்.
அதன் பிறகு அவனுக்கு எருமையின் மீது பிரியம் இருமடங்காயிற்று. சில வருடங்களில் அந்த எருமையும் இறந்துவிட்டது.
தன்னந்தனியனாகிவிட்ட அவனுக்கு இகலோக வாழ்க்கையில் வெறுப்பு வந்து சந்நியாசியாகி ஒரு சத் குருவின் சந்நிதியில் சிரவண மனனங்கள் செய்து கொண்டு வந்தான்.. அவனால் சிரத்தையாக சிரவண மனனங்களில் ஈடுபட முடியவில்லை.
குரு இதைக் கவனித்து அவனது பூர்வ கால வாழ்க்கையும் அப்பொழுது அவனுக்கு ஏற்பட்ட பந்த பாசங்களும் தான் அவனது சன்னியாசி வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.
ஒரு நாள் குரு அவனை அழைத்து சொல்லலானார்:
பிரம்மத்தை அஸ்தி, பாதி, பிரியம் என்று சொல்வார்கள்.அஸ்தி ( இருக்கிறது), என்றால் உள்ள பொருள் (சத் வஸ்து ) பாதி என்றால் பிரகாசிப்பது, பிரியம் என்றால் அன்பானது. உன்னுடைய எருமை உனக்கு பிரியமானதால் அதுவும் பிரம்மம் தான். ஆனால் அதற்கு நாமமும் ரூபவும் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்றால், உன்னுடைய நாம ரூபத்தையும் விலக்கி அதனுடைய நாம ரூபத்தையும் விலக்கிவிட வேண்டும். அப்போது உள்ளது பிரம்மம் ஒன்று தான்..
சிஷ்யனும் நாம ரூபங்களை விட்டு விட்டு ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டான்; ஞானமும் அடைந்தான்.
பகவன் சொன்னார்,  பொருள்கள் பலதானாலும் உள்ள பொருள் ஒன்றே தான். அவை நாம ரூபத்தில் தான் வேறு படுகின்றன.
நாம் அஸ்தியும் பாதியும் பிரியமும் பிரம்மத்தின் உருவகங்களே என்று தெரிந்து கொண்டால், இவையெல்லாம் சகஜ சொருப லக்ஷணங்கள் என்று புரிந்து கொண்டால் இவையெல்லாம் சத்-சித்-ஆனந்தத்தின் மறு பெயர்களே என்று புரிந்துகொண்டால் நமது அகக் கண் திறக்கப்பட்டுவிடும். நாம் ஆத்ம சாக்ஷாத்காரத்தை  நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.

அக்ஷரமணமாலயின் இந்த சுலோகத்தில் கூறியிருப்பதே தான்
கேனோ உபனிஷத்தில் வேறு விதமாக கூறப்பட்டுள்ளது.
   யச்சக்ஷ்ஷா ந பஸ்யதி  யேன சக்ஷும்ஷி பஸ்யதி
ததேவ ப்ரம்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாசதே

யத் சக்ஷுஷா---------எதை கண்களால்
ந பஸ்யதி--------------பார்க்க முடியவில்லையோ
யேன சக்ஷும்ஷிஎதன் காரணமாக நாம் கண்களால்
பஸ்யதி----------------வஸ்த்துக்களை புரிந்துகொள்கிறோமோ
தத் ஏவ---------------அதே தான்
ப்ரம்மத்துவம் வித்தி-----பிரமம் என்று அறிந்து கொள்க
யத் இதம்--------உபாசனை வேற்றுமையோடு
உபாசதே ------உபாசிக்கின்றாயோ
இதம் ப்ரம்ம ந-----இது பிரம்மில்லை

ஸ்தூலக் கண்களால் பார்க்க முடியாததும்,ஆனால் அந்தக் கண்கள் இயங்குவதற்கு காரணமான அந்த சுத்த சைதன்யம் தான் பிரம்மம் என்று அறிக.நீ உபாசிக்கின்ற மற்றவையெல்லாம் பிரம்மமல்ல.என்கிறது உபனிஷத்.

காணுகின்றவர் ( பார்க்கின்ற) கண்களுக்கு கண்ணாக இருந்து கண் இல்லாமலேயே சகலமும் காண்போனாகிய அந்த சத்-சிதானந்தனை எப்படி காண முடியும் என்று பகவான் அக்ஷர மண மாலையில் கேட்கிறார். அதற்கு நீ தான் துணை நிற்க வேண்டும் என்கிறார்.
இதே கருத்தை ஆன்ம வித்தைக் கீர்த்தனத்தில்    கீழ்கண்டவாறு கூறூகிறார்.
  விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய
பொறிக்கும் கண்ணாய் மனக்கணுக்குங் கண்ணாய்
வேறு ஒரிடத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது
காணொணாத கண் காட்சி பற்பல
காட்டினாய் மனக் கண்ணுளே
காண்பவன், காணப்படும் பொருள், காணுகின்ற செயல் எல்லாம் பிரம்மனின் செயலே..நானும் பிரமம், நீயும் பிரமமம், எல்லாமே பிரமமம் என்று புரிந்து கொண்டு நான் என்ற அகந்தையை அழித்து விடு.
அதற்கான அருளை எனக்கு தர வேண்டும் அருணாசலாஎன்று பகவான் நமக்காக பரமனிடம் வேண்டுகிறார்