Wednesday 4 March 2015

ரமணஜோதி 86

ரமணஜோதி 86

ரமணர் புகட்டும் நல்லாறிவு


 நாமுலகங் காண்டலா நானாவாஞ் சத்தியுள
வோர்முதலை யொப்பலொருதலையே----நாமவுருச்
சித்திரமும் பார்ப்பாஞ் சேர்படமு மாரொளியு
மத்தனையுந் தானாமவனுல்கு---கர்த்தனுயிர்
உள்ளது நாற்பது நுலின் முதல் சுலோகம் மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இந்தசுலோகத்தில் பகவான் ரமணர்,
“ எல்லாவற்றிற்கும் அடித்தளமாக ஒன்றே ஒன்று தன் உள்ளது அதுவே பலவாக தோ.ற்றமளிக்ககூடிய சக்தியுடையது. அந்த ஒன்று தான் ஆத்மா. அந்த ஒன்றே தான் காண்பவனாகவும் காணும் காட்சியாகவும்,காணுகின்ற இந்திரியமாகவும் இயங்குகிறது. அது தான் முப்படிமானம் எனப்படுகிறது.”
இரண்டவதிலிருந்து ஆறாவது சுலோகம வரை இந்த முதல் பொருளின் –ஆன்மாவின் குண்கணங்களை விவரிக்கிறார் பகவான்.
இரண்டாவது சுலோகத்தில் பகவான் உறுதியாக கூறுகிறார்,’ எது உள்ளது-ஆன்மாவா,கடவுளா, நாம் வெளியே காணும் உலகமா- என்ற சந்தேகம் எல்லாம் ‘நான்’ எனும் அஹம் உள்ளவரைத் தான்.அஹம் அடங்கிவிட்டால் நமக்கு ‘நானிலிருந்து’ வேறு ஒன்றுமில்லை என்பது தெளிவாகும்.”
     மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலே
    நிற்குமென்று மும்முதலு---மும்முதலே
   யென்னலகங் கார மிருக்குமட்டே யாங்கெட்டுத்
    தன்னிலையி னிற்ற  றலையாகுங் ----கொன்னே
மூன்றாவது சுலோகத்தில் மேற்கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார் பகவான்.இந்த உலகத்தைக்குறித்துள்ள பொய்-மெய் விகாரங்கள்,தன்னைவிட்டு வேறு ஒரு உலகம் இல்லை என்று உணருவது நம்மிலுள்ள நான் அழியும்பொழுது தான் என்கிறார் பகவான்.
நாலாவது சுலோகத்தில் நம்மிலிருந்த வேறுபட்ட உருவத்தையும், உலகத்தையும்  காணுபவன் எவன் என்று சற்றே சிந்த்தித்து பார்த்தால் பார்க்கும் அந்தக் கண்ணிலிருந்து வேறல்ல அந்தக் காட்சி;அது போல் காணுகின்ற கண் முடிவில்லாத கண் என்றும் விளங்கும். நமக்கு உருவமில்லையென்றால் நாம் காணும் உலகிற்கும் உருவம் இருக்காது.
ஐந்தாம் சுலோகத்தில் நமது உடல் தான் நாம் என்று எண்ணும்பொழுது உடலை உருவகப்படுத்தியுள்ள பஞ்ச கோசங்களும் உடல் தான்,;அந்த பஞ்ச கோசங்கள் இல்லையென்றால் –பஞ்ச பூதங்கள் இல்லையென்றால் இந்த உலகம் எங்கிருந்து வரும்?
ஆறாவது ஏழாவது சுலோகங்களில் பகவான் நம் மனதிலிருந்து வேறாய் ஒரு உலகம் கிடையாது எங்கிறார்.உலகம் நம் மனதிலிருந்து எழுகிறது,.மனம் ஒடுங்கி விட்டால் சிந்தனைகள் அடங்கிவிடும்;உலகமும் காணாமல் போய்விடும்..
     உலகைம் புலங்க ளுருவேறன் றவ்வைம்
   புலனைம்பொறிக்கு புலனா-முலகைமன
   மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை
   யன்றியுல குண்டோ வறைநேரே –நின்ற
பத்தாவது சுலோகத்தில் பகவான் அறியுதால் அறியாமை என்று இரண்டும் தனிதனி யில்லை;அறியாமை இருந்தால்த் தான் அறிவு வரமுடியும்.எடை அறியாமல் இருந்தோம் என்று யோசிக்கும்பொழுதே அரிந்துகொள்ளுதல் அறியமை எனும் நாணயத்தின் மறுபக்கம் தான் என்பது விளங்கும் எங்கிறார்.பகவான்.
அதே போல் யார் அறிந்துகொள்ளவேண்டுமோ அவனை( அதை ) அறிந்துகொள்ளாமல் தனக்கு அன்னியமானதை அறிய முயல்வது அறியாமை என்கிறர் பகவான் ரமணர்.
     அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்
வறியாமை யின்றாகு மந்த----வறிவு
மறியா மையுமார்க்கென் றம்முதலான் தன்னை
     றியு மறிவே யறிவா
அது போல் 13 ஆம் சுலோகத்தில் “
ஞானமாந் தானேமெய் நானாவா ஞாம்ஞ்
க்னமாம்”
என்கிறார்.
தானே உள்ளது-உண்மை—மற்ற பல பொருள்களை அறிவதெல்லாம் அஞானமே என்கிறா.
இப்படி உள்ளது நாற்பது முழுவதும் நல்லறிவு எது புல்லறிவு எது என்பதை விளக்குகிறார்.





No comments:

Post a Comment