Sunday 28 December 2014

ரமணஜோதி 49

ரமணஜோதி 49      

சௌரியம்

சௌரியங்காட்டினை சழக்கற்ற தென்றே
சலியா திருந்தா யருணாசலா
“அப்பழுக்கற்ற உன் சௌரியத்தை அலுக்காமல் காட்டினாய் அருணாசலா,” என்பது மேலெழுந்த வாரியாக பார்க்கும்பொழுது நமக்கு கிடைக்கும் பொருள்.
“அப்பழுக்கற்ற உன் சௌரியத்தைக் காட்டாமல் ஏன் அசைவில்லாமல் இருக்கின்றாய்,அருணாசலா?” என்பது இன்னொரு பொருள்.
“அருணாசலன் என்றாலே,அசைவற்ற அருணன் என்று பொருள். அருணன் என்றால் சுயம்பிரகாசமானவன். அப்படிப்ப்ட்ட நீ என்று என் அழுக்களையெல்லாம் உன் வீரத்தால்,சக்தியால்,சௌரியத்தால் அழிப்பாய்,அருணாசலாl?”
ஆத்ம போதத்தில் ஆதி சங்கரர் நமது ஆன்மாவைக் குறித்து கூறியதை சற்றேப் பார்ப்போம்:
          யத்பாஸா பாஸ்யதேர்காதி
          பாஸைர்யத்து ப்ஜாஸ்யதே
          யேன ஸர்வமிதம் பாதி
          தத்ப்ரமேத்யவதாரயேத்
                   .போ 61
ஏதொன்றின் ஒளியால் சூரியன் முதலிய ஒளிமிகு கோளங்கள் பிரகாசிக்கின்றதோ, எவை மற்றவைகளை பிரகாசிப்பிக்காதோஅவைகளை பிரகாசிப்பிக்கின்ற, இந்த விசுவத்தையே ஒளிமயமாக்குகிறதோ அது தான் பிரமம்,எங்கிறர் ஆதி சங்கரர்.
இன்னொரு இடத்தில் கூறுகிறார்:
ஏவமாத்மாரணௌ த் யான-
மதனே சததம் க்ருதே
உதிதாவகதிர்ஜ்வாலா
ஸர்வாஞானேந்தனம் தஹேத்
            ஆ.போ 42
ஆன்மா எனும் அரணியை தொடர்ந்து மதனம் செய்வதால் உண்டாகின்ற ஞானமாகின்ற அக்னி அஞானமாகின்ற அழுக்குகளை சுட்டெரித்துவிடுகிறது.
பகவான் ரமணரும் இதே கருத்தை தான் மேற்கண்ட சுலோகத்தில் கூறுகிறார். பரமாத்மாவான அருணாசலன் நம்மிலுள்ள அவித்யா எனும் அழுக்கை தஹிப்பித்து நம்மை சுத்தமாக்கி சுத்த சத் சிதானந்தன்யுடன் லயிப்பிக்கிறான்.ஆனால் அது எப்பொழுது என்று கேட்கிறார் பகவான்
இதற்கு ஒரே மருந்து ‘நான்’ யார் என்று உன்முகமாகத் தேடி  தெரிந்துகொண்டு ‘யானே எங்கும் பிரமமாக இருக்கிறேன்’ என்று புரிந்துகொண்டு விட்டால் நம் மனம் நசித்து விடும்.
நமது லட்சியமே மனோ  நாசமகத்தான் இருக்க வேண்டும்

சங்கர பகவத் பாதாளும் பரமாத்மா அசல்னாயிருக்கிறான் என்று கூறியுள்ளார். பரமாத்மா நிர்மலனாகவும்-அப்பழுக்கற்றவனாகவும் இருக்கிறான் எங்கிறார் அதி சங்கரர்.

அஹமாகசவல்ஸர்வம்
 பஹிரந்தர்கதோஸ்சுயுத
ஸதா ஸர்வசமஹ ஸித்தோ
நிஸங்கோ. நிர்மலோஸ்சலஹ:
ஆ.போ 35
“நான் ஆகாசத்தைப் போல் எல்லாவற்றின் உள்ளிலும் வெளியேயும்  ஒரே போல் இருக்கிறேன்;எல்லாவற்றோடும் ஒரே போல் விவகரிக்கின்றவனாகவும் ஆனால் எதோடும் பற்றில்லாதவனாகவும் இருக்கிறேன்; நான அப்பழுக்கற்றவன்-நிர்மலன்,அசலன்,”
பகவான் ரமணரின் முக்கியமான் ஒரு சீடராவார் ஸாது ஓம்.அவர் கூறுவார்:
‘ நான்” என்ற நினைப்பே மனம். இன்னொரு விதத்தில் பார்த்தால் மனம் காரணமாக எழும் சிந்தனைகளின் சேகரமே மனம்”
உபதேசவுந்தியார் எனும் நூலில் பகவான் மனோ நாசத்தைக்குறித்து  கூறுகிறார்:
இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளமெழு முந்தீபற
வெழாதுரு மைந்ததே லுந்தீபற
இந்த மனத்தை நாசமடைய செய்வது அவ்வளவு எளிதன்று.ஆகவே முதலில் நாம் மன அடக்கத்திற்கு முயல வேண்டும்..அது தான் பிரமனை அடைவதற்கான முதல் படி.
இதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்
அருணாசல பஞ்சரத்னத்தில் பகவான் கூறுகிறார்:
அருணிறை வான முதக் கடலே
விரிகதிரால் யாவும் விழுங்கு—மருண
கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய்
விரி பரிதியாக விளங்கு.
வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசா
வளியடக்க நிற்கு மனத்தா---லுளமதனி
லுன்னைத் தியானித்து யோகி யொளிகாணு
முன்னி லுயர்வுறுமீ துன்

ஸ்ரீ அருணாசல பதிகத்தில் பகவான் கூறுகிறார்:
எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும்,ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர்,மண் ஆகிய ஐம்பூதங்களும் அவற்றின் கலப்பாய் தோன்றிய பல் வேறு பௌதீகத் தோற்றங்களும்,பலவிதமான ஜீவராசிகளும் சிதாகாச சொரூபனான உன்னையன்றி, வேறு ஒன்றுமேயில்லையென்றால் உனக்கு வேறாக நான் ஒருவன் மட்டும் எப்படி இருக்க முடியும்?சிதாகாச சொரூபனாய் எனது இதயத்தில் இரண்டற்று கலந்து நீயே பிரகாசித்துக் கொண்டிருக்கும்பொழுது, உனக்கு அயலாக நான் என்று எழும் அஹங்காரத்தின் தலையை அது அழிந்துபோகும்படி உனது விரிந்த மலர் பாதத்தை வைத்து,அருணாசலா, நீ வெளிப்பட்டு வருவாய்,
 வெளிவளி தீனீர் மண் பல வுயிரா
விரிவுறு பூதபௌதிகங்கள்
வெளியொளியுன்னை யன்றியின் றென்னின்
வெளியதுளத்து வேறற விளங்கின்
வேறுயா னாருளன் விமலா

வேறென வெளிவருவேனார்
வெளிவரா யருணா சலவவன் றலையில்

விரிமலர் பதத்தினை வைத்தே

No comments:

Post a Comment